Saturday 15 September 2018

கையறுநிலை ஜெயலலிதா


         விரைவில் வாராயோ
மாண்டியா மண்ணில் முளைத்த வித்தே
தந்தை விரல்பற்றாமல் தானாக நடந்தாய்
சந்தியா பெற்ற இந்தியாவின் மகளே
படிப்பில் முதலிடம் பண்பின் பிறப்பிடம்
அறியாப் பருவத்திலே ஆயகலைகளை அறிந்தாய்
சுட்டிப் பெண்ணாய் வெள்ளித்திரை நாயகியாய்
சினிமா உலகையே கட்டிப் போட்டாய்
இதயக் கனியின் இதயத்தில் இடம்பிடித்தாய்
அண்ணா வழியின் அடியொற்றி நடந்தாய்
அவர்கொள்ளகை பரவ அர்ப்பணித்தாய் வாழ்வை
தமிழ்நாட்டின் தலைஎழுத்தை திறமையாய் மாற்றினாய்
இந்திய நாட்டின் எழுச்சி நாயகியே
அன்னை இந்திரா அருமை தாட்சர்
அனைவரையும் மிஞ்சிய வேலு நாச்சியே
தமிழ்நாடு தானும் தரணியில் மின்னிட
தன்சுகம் துறந்த மணிமே கலையே
விண்ணோர்கள் வேண்டியதால் வானுலகம் சென்றாயோ
விம்மி நிற்கின்றோம் விரைவில் வாராயோ




No comments:

Post a Comment