Friday 26 May 2017

குறளடியான்



குறளடியான் மாணடி சேர்ந்தார் 24-05-2017
வள்ளுவன் குறளுக்குத் தெளிவுரை அவரேதான்
உள்ளுவதும் செய்வதும் உலகின் நலமென்றார்
தெள்ளுதமிழ் குறளைத் தேன்பாகாய் உண்டவர்
கள்ளாமையும் கல்லாமையும் கற்பித்த வள்ளுவனை
உள்ளாத நாளெல்லாம் வீணான நாளென்றார்
பத்துடைமை பாருக்குத் தந்த வள்ளுவரை
எத்திக்குச் சென்றாலும் ஏற்றியே பேசிடுவார்
எடுத்து வைக்கும் அடியால் எறும்பு சாகுமென்று
தாள்தழுவ வேட்டிகட்டி தள்ளியே சென்றவர்
ஈட்டிய பொருளெல்லாம் ஈவதே அறமென்றார்
காட்டினார் பாதையாய்க் குறளை எங்களுக்கு
முத்தமிழ் அரங்கின்  முடிசூடா மன்னரவர்
முப்பால் குறளடியை முத்தமிடச் சென்றாரே!   
ஆறாகப் பெருகும் எங்கள் கண்ணீரை
அணைபோட்டுத் தடுத்தாலும் கரையுடைத்து போகுதய்யோ!
வாரம் தவறாமல் வள்ளுவனைச் சொன்னவர்தான்
வானுலகத் தேவர்க்குச் சொல்லப் போனாரே!
வள்ளுவோ பதியென்று வழங்கினார் நூலொன்றை
பிள்ளையைத் தேடித்தான் பேருலகம் சென்றாரே!
முப்பாலை நாங்கள்தான் முட்டிமுட்டிக் குடித்தோமே
அப்பா அப்பா தப்பேதும் செய்யிலியே
எப்படித்தான் மனம்வைத்தாய் எங்களைப் பிரிவே.
    புலம்பும் புலவர். ஆ.காளியப்பன் 

Wednesday 24 May 2017

பெண்பாற்பெயர்கள்

  பெண்பாற்பெயர்                  
   1) கொண்டல்நாயகி
2)கோதைநாயகி
3)கொடிமலர்
4)கொடிமங்கை
 5) கொடிமலர்ச்செல்வி
 6)கோட்டுப்பூ
 7)கோப்பெருந்தேவி
 8)கோப்பெருஞ்செல்வி
 9)கோமகள்
 10)கோமதி
 11)கோவழகி
 12)கொம்புத்தேன்
 13)கொம்பனையாள்
 14)கொஞ்சுங்கிளி
 15)கொட்டிமலர்
 16)கொடிப்பூ
 17)கொத்தலர்
 18)கொவ்வைச்செவ்வாய்
 19)கொள்கைமணி
 20)கோமுகி
 21)கொன்றைமலர்
 22)கொம்பனாள்
 23)கொவ்வைக்கனி
 24)கொற்றவை
25)கோதரசி
26)கோதை
27)கோசலை
28)கோசலாதேவி
29)கோகிலம்
30)கோகிலாதேவி
31)கோட்டீஸ்வரி
32)கோட்டுப்பூ
33)கோணம்மாள்
34)கோனிம்மன்
35)கோன்முகி
36)கோதனம்
37)கோதையர்
38)கோதாவரி
39)கோபிகா
40)கோப்பெருந்தேவி
41)கோப்பெண்டு
42)கோமடந்தை
43)கோமணி
44)கோமளவல்லி
45)கோமுகை
46)கோரி-பகவதி என்றுபொருள்
47)கோல்வளை—சிறந்தபெண்
48)கோவர்த்தினி
49)கோவிந்தம்மாள்
50)கோவைநாயகி
51)கோற்றொடி-அழகியபெண்
52)கொளுந்து
53)கொன்றைமலர்
54)கொன்றைச்செல்வி
54கொன்றைவாணி
55)கொன்றை எழிலி
   56)கொன்றைமுத்து
57)கொன்றைசூடி
58)கோலச்செல்வி
59)கோலவிழி
60)கோகிலவாணி


மல்லிகை       மல்லிகா        மல்லீஸ்வரி     மணப்பூ   
மணியம்மாள்    மணியரசி       மணிமேகலை   மணிமொழி
மரகதம்         மரகதவல்லி     மகிளாசுந்தரி    மகிழம்பூ
மகா            மகாதேவி       மகாலக்குமி          மங்கலவல்லி
மங்கை         மங்கையர்திலகம்     மங்கையர்க்கரசி மங்கையரசி
மங்கைநாயகி    மடக்கொடி      மடந்தை        மடப்பிடி
மட்டுவார்குழலி  மணவழகி       மணிக்கண்ணு   மணிக்கிளி
மணிக்கொடி     மணிநகை       மணிமங்கை     மணிமாலை
மலர்           மலர்க்கொடி     மணியரசி       மணிவடிவு
மணிவிளக்கு    மதுரமொழி      மலர்க்கண்ணி   மலர்க்குழலி
மலர்சூடி        மலர்ச்சோலை   மலர்ப்பாவை    மலர்முகம்
மகராசி         மணியம்மை    மழையரசி       மலையரசி
மறைச்செல்வி   மன்றத்தரசி           மணவழகி       மர்த்தினி
மனதிற்கினியாள் மதியழகி        மதனவதனனி   மதிவதனி
மதிவாணி       மதியரசி        மதுமதி         மதுமிதா
மின்னல்        மின்னல்கொடி   மின்னொளி     மின்னற்கொடி
மிருணாதேவி   மிருளாயினி     மிதுனாதேவி    மிருநளாயினி

Sunday 14 May 2017

பண்புடைமை



                பண்புடைமை                                                                                                 வள்ளுவன் உரைத்த வான்மறையின் நூறாவது
             அதிகாரம் பண்புடைமை. அதன் பிழிவேஇக்கவிதை
     (எண்சீர் ஆசிரிய விருத்தம்)   
                                                                                                         
பண்பெனப் படுவ பாங்குறப் பகரின்
    பல்லோர் தன்னொடு பழகும் பான்மை 
நண்பர் தன்னிடம் நகைத்தல் செய்திட     
   நயமிலா மொழிகளை நவிலல் குற்றம் 
சண்டையில் பகைவன் ஆயுதம் இழந்தால் 
   சட்டெனச் சமரினை நிறுத்தல் பண்பே
தண்டனை பெறுகிற கைதியே யாயினும்
    தனதுசொல் உரைக்கவே இடந்தரல் நலமே.

உறுப்பால் ஒத்ததால் மனிதன்  அல்லவே
    உயர்குடிப் பிறப்பும் அன்பொடு அருளையும்
பொறுமையும் உடையோன் பண்புடை மனிதன்
    பொருந்தும் நன்மையே புரியும் மாந்தனால் 
அறுந்து வீழா(து) அண்டம் உள்ளது
    அரும்பண் பின்றியே அரிதில் ஈட்டிய                                                     
உறுபொருள் அனைத்தும் ஊரினர் தமக்கு                                                              .              ஊறு செய்யும் உண்மையும் யதுவே  

  படித்தும் பட்டும் தேடிய அறிவு
        பல்லினைப் உடைய கூரரம்பு எனினும்
  துடிக்கும் மாந்தர் துன்பம் போக்காத் 
                                   துட்டன் பட்ட காய்மரம் யுலகினில் 
  மடிவரும் பசுப்பால் உள்ள செம்பில்  
      மாய்க்கும் நஞ்சினைக்  கலந்தாற் போன்றது
  இடித்துக் கூறும் நண்பர் இல்லா
      பண்பிலான் அடைந்த  செல்வம் தானே

நகுதல் அறியா பண்பிலான் தனக்கு
    நண்பகல் கூட நள்ளிருள் ஆகும் 
தகுதி யற்றவன் பதவி தன்னால்
    தரணி மாந்தர் துன்பம் கொள்வர்   
பகுத்துண் டறியா பண்பிலான் பெரும்பொருள்
    பயன்படா தழியும் உச்சிமரத் தேனென
வகுத்த குறட்படி வானுறை தெய்வமாய்
   வளம்பட வாழ்வோம் பண்புடன் நாமே.
26-07-2015அன்று முத்தமிழ் அரங்கில் வாசிக்கப்பட்டது                                                                            ஐஸ்வரியம் ஆகஸ்டு   இதழுக்குஅனுப்பி வைக்கப்  பட்டது