Sunday 20 November 2016

இன்றைய இலக்கணம்21-11-2016 வெளிப்படை குறிப்பு

            குறிப்பு வெளிப்படை21-11-16 இன்றைய இலக்கணம்
   ஒருசொல் வெளிப்படையாக  எல்லாருக்கும் பொருள் புரியும் வண்ணம் பொருள் உணர்த்துவது வெளிப்படை எனப்படும்.எ-டு மரம் வளர்ந்ததுஎல்லாருக்கும் எளிதில் புரியும்.
   ஒருசொல் வெளிப்படையாக  எல்லாருக்கும் பொருள் புரியும்வண்ணம் பொருள் உணர்த்தாமல் ஏதேனும் ஒருகுறிப்பால் பொருளை உணர்த்துவது குறிப்பு எனப்படும் .எ-டு இரண்டுக்குப் போகிறேன் .மலம்கழிக்கச் செல்கிறேன் என்று பொது இடத்தில் கூறமுடியாது. ஆகவே இரண்டிற்கு என்னும் குறிப்பால் உணர்த்துகிறோம்
குறிப்பால் பொருள் உணர்த்தவன
1.ஒன்றொழி பொதுச்சொல்
2.செய்யுள் விகாரங்கள்
3.தகுதி வழக்கு
4.ஆகுபெயர்
5.அன்மொழ்த்தொகை
6.வினைக்குறிப்பு
7.முதல்குறிப்பு
8.தொகைக்குறிப்பு
 இவையும்இவைபோல்பிறவும்குறிப்புமொழிஎனப்படும்.இனி ஒவ்வொன்றாகக்காண்போம்.                                                                                              
                  1. ஒன்றொழி பொதுச்சொல்
பொதுச்சொல் என்பது ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவான சொல்
எ-டு குழந்தை (ஆண்குழந்தைக்கும் பெண்குழந்தைக்கும் பொதுவான சொல்)
     மக்கள் (ஆண்மக்களுக்கும் பெண்மக்களுக்கும் பொவான பெயர்)  
     மாடு(பசுமாட்டிற்கும் காளை மாட்டிற்கும் பொதுவான பெயர்)
மீசை துடிதுடிக்க மக்கள் நால்வர் எழுந்தனர்  இதில் மீசை என்னும் குறிப்பால் மக்கள் என்னும் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவான பெயர் பெண்மக்களை விலக்கி ஆண்மக்களை மட்டும் குறிக்கிறது.
இரண்டு மக்களை (பேரை) மக்கள் பேற்றிற்காக மருத்துவ மனையில் சேர்த்தனர் இதில் மக்கள் பேற்றிற்காக என்னும் குறிப்பால் மக்கள் என்னும் பொதுப்பெயர் பெண்மக்களாக்குறிக்கிறது .நான்கு மாடுகள் பால் கறக்கின்றன எனும் போது கறக்கின்றன என்னும் குறிப்பால் மாடு என்னும் பசுமாட்டிற்கும் காளைமாட்டிற்கும் பொதுவானமாடு கறக்கின்றன என்னும் குறிப்பால் பசுமாட்டைக் குறிக்கிறது.
     இவ்வாறு ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவான பெயர் ஏதேனும் குறிப்பால் ஒருபாலை ஒருபாலை ஒழித்து மற்றொரு பாலை குறிப்பதுக் குறிப்பது ஒன்றொவி பொதுச்சொல் எனப்படும். (பிறபின்) அன்புடன் புலவர் ஆ.காளியப்பன்               


Tuesday 15 November 2016

இதுஎன்ன தமிழ்மொழியா? எவன்மொழிக்கோ அடிமைதானா?
சுழியத்தில் தொடங்கிப் பிறையாய் வளைந்து
நின்றும் கிடந்தும் இருக்கும் அகரம்
உலக மொழிக்கே முதலெழுத் தானது
எல்லா ஒலிக்கும் எழுத்து வேண்டுமெனக்
சமக்கிரு தத்தைத் தந்தவர் தமிழர்
அரபியர் வந்தே அருந்தமிழ் கற்றனர்
வளர்தமிழ் எண்ணை வையத்தில் பரப்பினர்
உலக மொழியெலாம் உயிரும் மெய்யுமாய்
ஊடுருவி நிற்பது ஒண்டமிழ் மொழியே
தமிழை அழிக்கத் தரணியில் யாருளர்?                                  
தமிழ்நாட்டுத் தமிழனே தடியெடுத்து நிற்கின்றான்
இந்திப் பேயை ஒழிக்க நினைத்து
ஆங்கில  அரக்கிக்கு அடிமைப் பட்டனர்
அமுதத் தமிழானது ஆங்கில நஞ்சாய்!
சித்தி மகளைத்தான் அத்தைமகள் ஆக்கினர்  (சித்தியும்,அத்தையும்Aunty)
பரங்கியர் ஆட்சி பாரதத்தில் போனாலும்
நம்தமிழ் நாட்டில் நல்லாட்சி செய்கிறான்
தமிழா? தங்கிலீசா? தலைகுனி தமிழா!
விலைமகளை விரும்பி விற்றாய் அன்னையை
கலைத்தமிழ் அன்னையைக் காக்கப் புறப்படு!
                  
புலவர்.ஆ.காளியப்பன்MA;MEd                                                  முத்தம்மாள்நிலையம்                                                      பூலுவபட்டி(அஞ்)                                      ஆலாந்துறைவழி                                           கோவை-641101                                                     அலைபேசி 9788552993
      மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் சிறப்புக் கவிஅரங்கிற்கு 19-10-16 அன்று அனுப்பப் பட்டது.  நடக்கும் நாள் 27-11-16                                   
              முகவரி:  கவிமாமணி சி.வீரபாண்டியத்தென்னவன்
                     10ஆம்குறுக்குத்தெரு,திருவள்ளுவர் நகர்
                      பழங்காநத்தம். மதுரை 625003.

                      கைபேசி 98421-81562            

தொல்காப்பிய இலக்கணம்

              இன்றைய இலக்கணம்15-11-16
ஒரு ஊர் என்பது சரியாஓர் ஊர் என்பது சரியா?
பெருமை+ அறம்=பேரறம் எப்படி ஆயிற்று என்பது பற்றிப் பார்ப்போம்
ஒரு சொல்லுடன் ஒருசொல்சேருவதைப் புணர்ச்சி என்பர்.
ஒரு சொல் உயிர் எழுத்திலோ அல்லது மெய் எழுத்திலோதான் முடியும்.அதாவது அ முதல் ஔ வரை உள்ள எழுத்துகளில் ஒன்றோ அல்லது க் முதல் ன் வரை உள்ள எழுத்துகளில் ஒன்றோ தான் வரும். எடுத்துக்காட்டு காகம் இது ம் என முடிந்து உள்ளது. காக்கா இது கா எனமுடிந்துள்ளது. கா என்பதை க்+ஆ பிரித்து ஆவில் முடிந்தது எனக்கொள்ள வேண்டும். காகம் என்பதன் முதல் எழுத்து கா அல்ல க்+அ எனப்பிரித்து க் எனும் மெய் எழுத்து வந்ததாகக் கொள்ள வேண்டும்.
முதலில் நிற்கும் சொல்லை நிலைமொழி என்றும்  அத்துடன் சேரவருகின்ற சொல்லை வருமொழி என்றும் கூறுவர்.
வருமொழி முதலில் உயிர் எழுத்துகள் வரும்போது கவனித்தே சொற்களைச் சேர்க்க வேண்டும்.
ஒரு ஓர் பற்றி முதலில் பார்ப்போம்.
 மெய் எழுத்துகளில் வருமொழி தொடங்கினால் ஒரு போட்டு எழுத வேண்டும்.
எ-டு ஒரு மாடு ஒருகதை
 வருமொழி உயிர் எழுத்துகளில் தொடங்கினால் ஓர் போடவேண்டும்.
எ-டு   ஓர் ஊர், ஓர்ஆடு, ஓர் ஐயம்   
அதே போல் அது மற்றும் அஃது போடும் இடங்களைப் பார்ப்போம்
மெய் எழுத்துகளில் வருமொழி தொடங்கினால் அது போட்டு எழுத வேண்டும்.
எ-டு அது மாடு, அது கதை
உயிர் எழுத்துகளில் தொடங்கினால் அஃது போடவேண்டும்.
எ-டு  அஃது ஊர், அஃது ஆடு,  அஃதுஓர் ஐயம் 
அதேபோல் பண்புப் பெயர்கள் சேரும் முறையைப் பற்றிப் பார்ப்போம்
செம்மை.பெருமை, சிறுமை போன்று மை என முடியும் சொற்களை நாம் பண்புச் சொற்கள் என்போம்.
மெய் எழுத்துகளில் வருமொழி தொடங்கினால் இயல்பாய்ச் சேரும்.
எ-டுசெம்மை+கோழி= செங்கோழி
     பெருமை+பனை= பெரும் பனை
வருமொழி உயிர் எழுத்துகளில் தொடங்கினால் முதல் எழுத்து நீளும்
 எ-டு செம்மை+அடி= சேவடி
      பெருமை+அறம்= பேரறம்
பண்புப் பெயர்ப் புணர்ச்சியில் விதிவிலக்குகள் உண்டு அவை பற்றி நாளை பார்ப்போம்
 இதை ஆங்கிலத்தில் Article என்பர்
எங்கு  a, an,the (some) போடவேண்டும் என்பதையும்  அறிந்து கொள்வோம்
தமிழ் மொழி போலவே ஆங்கிலத்திலும் உயிர் ஒலி(vowelsound)மெய்யொலி(Consonant sound) உண்டு.
இதைத் தமிழ்முறைப்படிப் பார்ப்போம்
A E I O U என்பன ஆங்கில  (vowels) உயிர் எழுத்துகள் எனப்படும்
பிற ஆங்கில எழுத்துகள் (Consonants)மெய் ஒலிகள் எனப்படும்.
வருமொழி முதலில்(vowels) உயிர்ஒலிகள் வரும் போது AN போடவேண்டும் அதற்கு எளிய வழி வருமொழியில் வரும் ஆங்கிலச் சொல்லைச் சொல்லிப் பார்க்கவேண்டும். அது தமிழில் உள்ள அ,ஆ----- ஔ என்ற ஒலிவந்தால் AN போடவேண்டும். An ass, An enemy, an inkstand,an orange,an umbrella
 அ.ஆ ஒலி இல்லாமல் இருந்தால்  (A E I O U என வந்தாலும்.) A போடவேண்டும்.
எ-டு a university(இதைத்தமிழிலில் யுனிவர்சிட்டி என்று சொல்வதால் தமிழ் அ,ஆ ஒலி அல்ல யு என ய் முதலில் வருகிறது )a union, a european(யூரோப்பியன்), a ewe  a unicorn a useful(யூஸ்புல்) man
உலகில் உள்ள ஒரே பொருள் மற்றும் superlatives முன் The போடவேண்டும்.
 The Red sea
 The Hindus
 The best

ஆங்கிலம் அறிந்தோர் ஆங்கில இலக்கணத்தை எளிய முறையில் அரசுப் பணி கையில் குழுவில் பகிரவும்