Sunday 22 September 2019

பேரூராதீனமும் ஈரோட்டுப் பெரியாரும்


பேரூராதீனமும்  ஈரோட்டுப் பெரியாரும்
                                (ஆத்திகமும்        நாத்திகமும்
              காவியும்           கருஞ்சட்டையும் நேர்)
            சிலேடை (இரட்டுற மொழிதல்)      
வெண்தாடி நீவிடுவார் கோலொன்றைத் தாங்கிடுவார்
கண்ணாய் மனிதரைக் காத்திடுவார் --- பெண்தனைப்
போற்றியே பேசிடுவார் பேரூரும் ஈரோடும்
சாற்றியதே ஒன்றென இன்று.

      *கடவுளே யில்லை எனவுரைத்தார்  நாளும் 
      திடமான எண்ணத்தில் நின்றார்  --- மடத்தினில்
      உள்ளார்த் திருந்த வழியுரைத்தார் இவ்வுலகில்
      கள்ளொழியக் கண்டார் வழி.
     
      இருவர் பெயரும் இராமசாமி என்றும்
      சருகான மக்களுக்குச் சாந்தத்  -- திருமுகம்
      காட்டி களிப்பூட்டப் பேசிடுவார் ஈரோடும்
      வாட்டமில் பேரூரும் நேர்
 
      ஆரியப் பேயோட அன்றாடம் தாமுழைத்தார்
      வீரியப் பேச்சாலே மக்களைப் ---- பாரிடத்தில்
      சாதிப்பேய் ஓட்டிடவே சந்தியெலாம் செப்பியே
      வீதியெல்லாம் சென்றார் நடந்து.

      கல்லூரி கட்டினார் கன்னித் தமிழரின்
      அல்லலுக்குக் காரணத்தை அன்றாடும் -- சொல்லான
பேருரை மந்திரத்தால் மாற்றியே  வைத்ததால்
      பேரூரும் ஈரோடும் நேர்
     
      நம்தமிழர் வாழ்வுக்காய் நாளும் உழைத்தாரே
      தம்பால் அனைவரையும் ஈர்த்தாரே ---சம்பளம்
      பெற்றிடா வேலையாள் ஆனாரே எந்நாளும்
      பேரூரும் ஈரோடும் நேர்

  *கடவுளேயில்லை = கடவுளே+ இல்லை
  கடவுளேயில்லை = கடவுள்+ ஏ(ன்)+ இல்லை
            ஆக்கம்
     தொல்காப்பியச்செம்மல்   
  புலவர் ஆ.காளியப்பன்
  தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
     அலைபேசி 9788552993

இவர்தாம் பெரியார்


          அவர்தாம் பெரியார்

தூங்கிய தமிழன் தொடைதனில் கயிற்றினை
தாங்கியே ஆரியன் திரித்திடும் போதினில்
தட்டி எழுப்பி தன்மானம் ஊட்டினார்
கொட்டிய செங்கல்லாய் இருந்த தமிழரைக்
கோபுர மாக்கினார் கோதினைப் போக்கினார்
ஆபுத்திரன் கைஅமுத சுரபிபோல் அறிவால்
அனைவரையும் கவர்ந்தார் ஆண்டவனை மறுத்தார்
சாதியெனும் சாக்கடையை மதமாம் மலக்குழியை
ஆதியில்  அகற்றிட  சாடோடு முறமெடுத்தார்  
செருப்படி பொறுத்ததால் செப்புச்சிலை ஆனார்
நெருப்பில் புடமிட்ட சொக்கத் தங்கமவர்.
தொண்டன் ஆனாலே ஏச்சுண்டு பேச்சுண்டு
குண்டாந் தடியால் மொத்துண்டு நினையென்றார்
குறளுக்கு மாநாடு கூட்டியதும் அல்லாது
அறத்திற்கு மாறாக அணுவளவும் நடக்காது
பொருளைத் தேடியே பொத்திக் காத்தவர்
இன்பம் ஏழைக்கு எப்போதும் வேணுமென்பார்
முற்றிய நோயுடனே முட்டாள் தனம்போக்க
சுற்றிச்சுற்றி வந்தார் சொந்தபணத் தாலே
தமிழ்நாட்டு ஊர்களில் தாள்படா ஊரில்லை
உமியாகிப் போகாமல் மணியோடு சேர்ந்தாரே
கடைசிவரை கயிலியே ஆடை தானாம்
விடைபெற்ற போதும் விழுதுகள் தாங்குமய்யா.
கொள்கைகள் எப்போதும் குன்றென நிற்குமய்யா

                       ஆக்கம்
தொல்காப்பியச் செம்மல்
புலவர்ஆ.காளியப்பன்,க.மு,.கல்.மு.,
தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
பூலுவபட்டி(அஞ்சல்),
கோயமுத்தூர் 641101.
அலைபேசி 9788552993 / 8610684232                                                         Email amuthankaliappan@gmail.com
www tholkappiyam.org
pulavarkaliappan.blogspot.in


Tuesday 10 September 2019

புணர்ச்சி உயிர்முன் உயிர்


                         
முன்பு கூறியது போல் நிலைமொழியில் எந்த எழுத்து என்றும் வருமொழியில் எந்த இனம் எனப்பார்க்க
 இங்கு இ,ஈ,ஐ, என்ற எழுத்துகளுடன் பிற உயிர் எழுத்துகள் சேரும் விதத்தைப் பார்ப்போம்.
மணி
தீ
பனை
அன்று இ. ஈ. ஐ என முடியும் சொற்களை எடுத்துக்கொள்வோம்.
இதற்கு முன் அழகிது ,அழகு என்ற சொற்களாக வருவதாகக்கொள்வோம்

மணி+ அழகிது=
ஊசியும் ஊசியும் பாயாது உயிரும் உயிரும் சேராது.நினைவில் கொள்க.
மண்இ இது நிலைமொழி
வருமொழி அ
எனவே இ என்ற எழுத்தும் அ என்ற உயிரெழுத்தும் சேரா.அவற்றை உடன்படுத்துவதற்கு (சேர்ப்பதற்கு ய் என்னும் மெய்யெழுத்து வருகிறது.
மணி+(ய்+ அ) ழகிது.
ஒர் உடலைக் காணின் அந்த உடலுடன் உயிர் சேர்வது இயல்பு ஆகவே ய்+அ = ய ஆயிற்று. உடன்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே(நன்னூல்204)
இப்பொழுது மணி+யழகிது ஆகி மணி யழகிது ஆயிற்று
இதேபோல் தீ+எரி ஈ இறுதியிலும் எ என்ற உயிர் வருமொழியிலும் வந்ததால் உடம்படு மெய் ய் வந்து தீ+(ய்+ எ) ரிதீயெரி ஆயிற்று
அதேபோல் பனை+ அழகு= பனை+(ய்+அ)ழகு =பனையழகு ஆயிற்று.
இனி இ,ஈ,ஐ தவிர  ஏ நீங்கலாக பிற அ,ஆ,உ,ஊ, எ,ஒ,ஓ,ஔ என்ற எழுத்துகள்  வரின்(எ என முடியும் சொற்கள் தமிழில் இல்லை)
விள, பலா, கடு, பூ, நொ.கோ,கௌ
விள+அழகு= விள(ள்+அ)+(வ்+அ=வ)ழகு= விளவழகு அ விற்கு முன் அ
பலா+அழகு= பலா(ஆ)+(வ்+அ=வ)ழகு= பலாவழகு ஆ விற்கு முன் அ உயிர்
கடு+அழகு= கடு(உ)+(வ்+அ=வ)ழகு= கடுவழகு உ விற்கு முன் அ உயிர்
 உ வில் முடியும் சொற்களுக்கு சிறப்பு விதியும் உண்டு பிறகு பார்ப்போம்.
பூ  (ஊ)+(வ்+அ=வ)ழகு= பூவழகு ஊ விற்கு முன் அ உயிர்
நொ என்றால் துன்பப்படு (நோய்) என்று பொருள் இப்போது பயன்பாட்டில் இல்லை.
நொ(ஒ)+(வ்+அ=வ)ழகு= நொ+(வ்+அ)ழகு  ஒ விற்கு முன் அ உயிர்
கோ(ஓ)+(வ்+அ=வ)ழகு= கோவழகு ஓ விற்கு முன் அ உயிர்
கௌ(ஔ)+(வ்+அ=வ)ழகு= கௌவழகு ஔவிற்கு முன் அ உயிர்
 இனி ஏ எழுத்தில் ஒரு சொல்முடிந்தால் ய்,வ் என்ற இரண்டில் ஏதாவது ஒன்றைப்போட்டுக் கொள்ளலாம்.
 ஆதி பகவன் முதற்றே உலகு
முதற் றே(ற்+ஏ) உலகு
முதற்றே ஏ+(வ்+உ=வு)லகு முதற்றே வுலகு
முதற் றே(ற்+ஏ) உலகு

முதற்றே ஏ+(ய்+உ=யுலகு முதற்றே யுலகு

ஆயிடை=அவ்+இடை என்று நச்சினார்க்கினியர் பிரிக்கிறார்
அ+இடை என்று சிவஞான முனிவர் பிரிக்கிறார்
நிற்க
நன்னூல் படி
எகர வினாமுச் சுட்டின்
முன்னர்உயிரும் யகரமும் எய்தின்
வவ்வும்பிற வரின் அ வையும்
தூக்கிற் சுட்டு நீளின் யகரமும் தோன்றுதல் நெறியே
அந்த அடிப்படையில் அ என்னும் சுட்டு எழுத்து ஆ என நீளும் போது ய் வந்தது ஆயிடை= அ+இடை எனப்பிரிக்க வேண்டும் 
அ+இடை இ, ஈ ஐ வழி யவ்வும் எனும் சூத்திரப்படி வ் வந்தது பாட்டில் சுட்டெழுத்து வந்தது நீண்டதால் ய் வந்தது  பதிவு புலவர் ஆ.காளியப்பன்