Wednesday 24 May 2023

ஐயா வா? அய்யாவா?

                           ஐயா வா?  அய்யாவா?

தொல்காப்பியச்செம்மல்புலவர்ஆ.காளியப்பன்                                                

                   தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்                                                               உலகீர் ஐ என்னும் சிறப்பான எழுத்தை விட்டுவிட்டு அய் என்று எழுதலாமா? கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி "தமிழ்க்குடியாகும்!* உயிர், உடல், ஆய்தம் இவற்றோடு தோன்றிய தமிழர் தாம்பேசும் தமிழ் மொழியிலும் உயிர் எழுத்துக்களையும்,  மெய்யெழுத்துக்களையும் ,ஆயுத எழுத்தையும்  உருவாக்கிச் சங்கம் வைத்து ஆராய்ந்து தமிழ் மொழியை வளர்த்துள்ளனர், சங்கம் வைத்து ஆராய்ந்து செம்மைப்படுத்தப்பட்ட மொழி தமிழ் ஒன்றே யாகும். தமிழர்  தாம் வணங்கும்  தெய்வத்தை ஐந்து எழுத்து மந்திரத்தால் வழிபட்டனர். நிறங்கள் ஓர் ஐந்துடையாய் என்றனர். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்ற ஐந்து தொழில்களைச் செய்பவன் இறைவன் என்றனர். ஐம்பெரும் பூதங்கள் கலந்த கூட்டமே உலகம் என்றார் தொல்காப்பியர்.  ஐம்பொறிகள், ஐந்து புலன்கள்,. ஐம்பொன், ஆனைந்து, ஐயமுதம் என்றெல்லாம் சிறந்த பொருள்களை  ஐ என்னும் சிறப்பு எழுத்தைப் பெற்ற ஐந்து என்றனர். 

   தற்காலத்தில் ஐவகை நிலத்தில் வாழும் மக்களுக்கு ஓர் ஐயம் .ஐயாசாமியா? அய்யாசாமியா? எப்படி எழுதுவது?                        

ஐய* இன்னும்நான் எத்தனை நாள்செலும் அல்லல்விட் டருள்மேவத்
துய்ய நன்னெறி மன்னிய அடியர்தம் துயர்தவிர்த் தருள்வோனே
வெய்ய நெஞ்சினர் எட்டொனா மெய்யனே வேல்கொளும் கரத்தோனே
செய்ய மேனிஎஞ் சிவபிரான் பெற்றநற் செல்வனே திறலோனே

இதில் துய்ய, வெய்ய, செய்ய என அடுத்தடுத்து வரினும் அதற்கு ஏற்றாற்போல் முதலில் உள்ள ஐய ஆனது அய்யஎன்று ஆளப்படவில்லை

     "அய்" என்று புழங்கிய போது சில உரையாட்டுகளும் வாதுகளும் கூட வந்தன. "அய்" என்று எழுதுவது தவறில்லை என்பதே அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது. ஆயினும் அவர்கள்."அய்" என்றே எழுதவேண்டும் என்று வலியுறுத்துவதில்லை. ஐ என்றே  எழுதவேண்டும் அய் என எழுதக்கூடாது. பெரியவர்கள் சிலர் (பெரியார் அல்ல) எனக்குச் சொன்னபோது இதனை நுணுகிப் பார்க்கத் தோன்றியது.

   .ஐ என்ற எழுத்துடன் சில தமிழ்ச் சொற்கள் தொடங்குகின்றன. ஐ என்ற எழுத்துடன் பல தமிழ்ச் சொற்கள் முடிகின்றன.  தனிச் சிறப்புடைய என்ற எழுத்தை அய்என்று பிழையாக எழுதித் தமிழின் எழுத்துக்களையும் சொற்களையும் சிதைக்க முற்படுகின்றனர் சிலர்அதற்கு மறுப்பாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

       முதலில் ஐ என்னும் ஒற்றை எழுத்தின் சிறப்பை அறிவோம்.  தமிழ் எழுத்துகளின்  முதல் எழுத்துகளாக உள்ள  உயிரெழுத்து,  மெய்யெழுத்து  என்னும் இரண்டு வகைகளில்   உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும்  கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துகள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும் இன எழுத்துக்  குறில் இல்லா நெடில். அதேபோல் ஔகாரமும்    

    தமிழ் நெடுங்கணக்கில் ஐ என்பது ஒன்பதாவது எழுத்தாக உள்ளது  மொழியின் ஓர் ஒலியையும் அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஐகாரம்" ஐகான் என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துகளைக் கற்பிக்கும் போதும் இவ்வெழுத்தை "ஐயன்னா" என்பதே வழக்கம்.                    

       தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களிலேயே ஐகாரமும் ஔகாரமும் தனிச் சிறப்புடையன அவற்றுள்ளும் யே சிறப்பிற்கு உரியது. அதனால்தான் தமிழ் நெடுங்கணக்கில் சிறப்பிற்குரிய  எண்ணாகிய  9 ஆம் இடத்தில்  வைத்துள்ளனர். ஒன்பது ஒரு சிறந்த எண் (தனிப்பதிவில் காண்க) ஆகவே  ஐ-யை  ஏன் தமிழ்  நெடுங்கணக்கில் ஒன்பதாதவது எழுத்தாக வைக்கவேண்டும் (ஆங்கிலத்திலும் இந்தி பிரஞ்ச் ஆகிய மொழிகளிலும் ஒன்பதாவது எழுத்தாகவே உள்ளன.)                      

              ஒன்பது என்ற எண்ணின்   சிறப்பு                                

 9 உடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும்  விடையின் கூட்டுத்தொகை 9                                      சான்று  9x6  =54  5+4= 9,     8x9  =72 7+ 2 = 9                                                        9 உடன் எந்த எண்ணை கூட்டினாலும்  விடையின் கூட்டுத்தொகை கூட்டப்பட்ட எண்ணாக இருக்கும் சான்று  9+ 9  =18  8+1= 9 கூட்டப்பட்ட எண் 9    9+ 7  =16   1+6= 7 கூட்டப்பட்ட எண் 7

     ஒன்பது எந்த எண்ணுடன் சேர்ந்தாலும்  தன் தன்மை மாறாது ஒன்பதாகவே இருக்கும்  இஃது இறைவன் தன்மை. சுதந்திரம் உடையவனாய் விளங்குதல்.அதாவது பிறர் வயப்பட்டுச் செயல் புரியாது  அனைத்திலும் சுதந்திரமுடையன் ஆதல் ஒன்பதும் இத்தன்மையைப் பெற்றிருப்பதால் .ஒன்பதும் எண்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.    

    அதனால் தான் சிறப்பு, தலைமை எனும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியாகிய ஐ-யை ஒன்பதாவது எழுத்தாகத் தமிழ் நெடுங்கணக்கில் வைத்துள்ளனர்.

     அக்காரணம் பற்றியே தொல்காப்பியர் ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒன்பது ஒன்பது இயல்களாகப் பிரித்துள்ளார். திருமூலர் திருமந்திரத்தை  ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டதாகச் செய்துள்ளார் . ஒவ்வொரு பிரிவும் ஒரு தந்திரம்எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது தந்திரங்களும், ஆகமங்கள் ஒன்பதின் சாரமாக அமைந்துள்ளன.

 அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் பொருள்  பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர்,     ஸ்ரீகிருஷ்ணருக்கு விருப்பமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்!

மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான்.

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்.
பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!.
ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர்.நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.
  9 என்ற எண்ணை  திருநங்கையரைக் குறிக்கும் கேளிக்கையாக எண்ணாமல் புராணங்களிலும், நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதைப் போற்றுவோம்.

     இத்தனை சிறப்புகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு இருப்பதால்தான் யை ~ஒன்பதாவது எழுத்தாகத் தமிழ் ஆங்கிலம் இந்தி ஆகிய மொழிகளில் வைத்துள்ளனர்

ஐ என்பது தமிழ் உயிர் எழுத்தில்  9 ஆம் உயிரெழுத்து அதை ஒன்பதாம் இடத்தில் வைப்பதன் நோக்கமே அதன் சிறப்புக்கருதியே.  ஒன்பதின் சிறப்பை நான் எழுதிய ஒன்பதின் சிறப்பு எனும்  தனி கட்டுரையில் காண்க.pulavarkaliappan.blogspot.in என்னும் தளத்தில் காண்க.

  என்பது ஓரெழுத்து மட்டுமல்ல ஒரு சொல்லும் ஆகும் ஐ என்பது ஏராளமான அழகிய பொருட்களைத் தருவது உறுதியாக நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது ஆங்கிலத்தில் ஓரெழுத்து ஒரு மொழி  I  மட்டுமே.

      என்னும் நெட்டெழுத்தின்  ஓரெழுத்து ஒரு மொழி   அதன்பொருள்

1.9 ஆம் உயிரெழுத்து 2.தலைவன் 3.அழகு 4.ஐந்து 5.ஐயம் 6.வியப்பு 7.மெல்ல - பைய 8.பண்புப்பெயர் விகுதி 9.ஒரு சாரியை 10.கடவுள் 11.விகுதி 12.குரு 13.கோழை 14.சர்க்கரை 15.தும்பை 16.தண்ணீர் முட்டான் கிழங்கு 17.துர்க்கை 18.நுண்மை 19.பருந்து 20.தந்தை 21.பெருநோய்.22.யானையைப் பாகன் அதட்டும் ஓசை 23. இரண்டாம் வேற்றுமை ஆகிய ஓரிடைச்சொல் 24.கணவன் 25. பாஷாணம் 26 வண்டி மாட்டை நொச்சுக்கூட்டும் ஒலி 27.எருதுகள் கபிலை ஓட்டும்போது ஐ ஐ என மெதுவாகச்சொன்னால் நிற்கும்  ஐ எனவேகமாக உரக்கச்சொன்னால் செல்லும். 27. அண்ணன் (தமையன்(தம் ஐயன்) 28, மகன் ( தனையன் தன்ஐயன்) 28 பண்புப்பெயர் விகுதி (தொல்லை)29 தொழிற்பெயர் விகுதி(கொலை) 30 உரிச்சொல்   (உரிச்சொல் வியப்பு என்னும் பொருளைத் தரும்.(தொல்காப்பியம் உரியியல்)  26  ஐந்தின் குறுக்கம்  இப்படி இருபத்தைந்து பொருள்களுக்கு மேல் உள்ளன அய் என்றால் இப்படிப் பொருள் வருமா?  

சதுர் அகராதி இந்த க்கு அரசன், அழகு, ஆசான், இரண்டன் உருபு. இருமல், ஓரெழுத்து, கடவுள், கோழை, சாரியை , சுவாமி,  நுண்மை,  யானைப்பாகன் தட்டும் ஓசை என்று பொருள் தருகிறது  எனக்கூறுகிறது.அய்என்பதை அய்யே! அருவருப்புப் பொருகளைச் சுட்டிக்காட்டவே பயன்படுத்துவர்.

  "ஐ" என்பது நாம் இயல்பாக ஒன்றைப் பார்த்து வியக்கும் போது சொல்வது. "ஐ அழகா யிருக்கே!" என்று சொல்வது இயல்பு. இந்த "ஐ" யை உச்சரிப்பதற்கும் சொல்வதற்கும் அதாவது வியத்தற்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவையேயில்லை. ஏனெனில் இது இயல்பான மாந்த ஒலி! அப்படிப்பட்ட வியப்பைக் குறிக்கும் சொல்லை விட்டுத் தர என் மனம் ஒப்பவில்லை.

  "ஐ" என்பது இன்னொரு வகையில் நாம் இயல்பாகப் பயன்படுத்துவோம்.இதனை மாடு கன்றுகளோடு பழக்கப் பட்டவர்களுக்கு நன்கு தெரியும் .மாடுகளை / காளைகளை முடுக்குதற்கும் தடுக்குதற்கும் இந்தச்சொல்/ஒலி பயனில் வரும். மாடுகளை அமைதிப்படுத்தற்கு "ஐ...ஐ." என்று சொல்வார்கள். அமைதிப்படுத்தும் போது மெலிந்து ஒலிப்பர். அது அழகான மெல்லிய ஓசையாக வரும். முடுக்குதற்கும் "ஐ ஐ" என்று வலிந்து ஒலிப்பார்கள்./

      ஐகாரம் என்பது சூரிய, சந்திர கலைகளின் இயைபினாற் தோன்றும் சுழுமுனை என்னும் கலையினையும் ,நாடிகளில் சேட்டுமம் என்னும் நாடியையும் குறிக்கும்.  'ஐயம்' என்பது ஆண் நாடியா அல்லது பெண் நாடியா எனப் பகுத்தறிய இயலாத நிலையினை உணர்த்துவதாம், இரு பொருளின் மயக்குத் தோற்றமாம் நிலையினை ஐயம்’ (ஐயுறவு) எனக் குறிப்பதும் இதனடியில் எழுந்ததேயாம்,

இந்த ஐய நிலை கைவரப் பெற்ற, ஊழ்க மெய்யியலில் முதிர்ந்தோரையே 'ஐயன்'எனவும் 'ஐயனார்' எனவும் வழங்கும் வழக்கம் தோன்றியது, இவ்வாறு ஊழ்க மெய்யியலில் இறுதி நிலை கைவரப் பெற்ற ஆசீவகத் துறவிகளே 'ஐயனார்' எனும் சிறப்புத் தகுதி நிலையினால் தமிழர்களால் வணங்கப்படும் சிறப்புப் பெற்றவர்களாவர்.

    ,நாளடைவில் சிறப்புக்குரிய சான்றோர்களையும் தகுதி நிலையில் உயர்ந்தவர்களையும் கூட 'ஐயா' எனும் விளி குறிப்பதாயிற்று, இவ்வாறு பல்லாற்றானும் சிறந்த நிலையில் போற்றத் தக்க கருத்துகளைத் தம் நூலில் வழங்கிய காரணத்தாலேயே திருவள்ளுவரைக் கூட அண்மைக் காலத்தில் ஐயன் திருவள்ளுவர் என வழங்கும் வழக்குத் தோன்றியது.

    ஐ-தலைவன் என்னும் பெயர்ச்சொல். தலைவனை உணர்த்தும் தலைவனைக் குறிக்கும்.  இந்த ஐ என்னும் பெயரிலிருந்து தோன்றிய சொற்கள் ஐயன், ஐயர்  ஐயனார்  ஐயப்பன்,  ஐயை போன்றவை. ஐயா என்பது தந்தையின் அப்பா,  சிலஊர்களில் தந்தை, பெரியவர், ஆசிரியர், உயர் அதிகாரிகள் ஆகியோரையும் குறிக்கும் கடிதம் எழுதும் போது விளித்தல் பொருளிலும் வரும்..இவற்றில் ஐயை என்பது பெண்பாற்பெயர். ஏனையவை ஆண்பாற்பெயர்கள் . ஐயை என்பது நமது தாய்வழி தொன்மையான பெண் தெய்வத்தின் பெயர் மதிப்பிற்கும் சிறப்பிற்கும் உரியது ., ஐய, ஐயன், ஐயள், ஐயை, ஐயர், ஐயா, ஐயோ போன்ற சொற்கள் மிகத் தனித்தன்மை வாய்ந்தன. அதை அப்படியே போற்ற வேண்டும்.

    தமிழ் எழுத்துகளிலேயே தனக்கென ஒரு கம்பீரத்தை உடைய எழுத்து .

எழுத்தைப் பாருங்கள். ஒரு தமிழ் அரசன் தன்னைப் பணிந்த பகைவன் முன்னால் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அழகைத் தன்னிடத்திலே கொண்டு விளங்கும். சொற்களோடு சேர்த்து உச்சரிக்கும் போது, வசதியும் இனிமையும் கூடுகிறது.

மாணிக்கக் கூத்தனை, வண்தில்லைக் கூத்தனை”- திருமூலர்.

என்கிற ஓரெழுத்தேகூடக் கடவுளைக் குறிக்கிறது. அஃது அகரம்-இகரம்-யகரம் என்ற மூன்றையும் சேர்ந்தது.அகரம்-கடவுள்,பதி - இகரம்-ஆத்மா-பசு  -  யகரம்-உலகம், பாசம் என வாரியார் சுவாமிகள் விளக்குகிறார்

     சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க நமசிவாயஎனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது. நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துகளுக்குள்ளே. என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. யஅஞ்சேல் என்ற வலது அபய கரத்தையும், குறிக்கின்றன

    ஐ எனும் எழுத்தின் வரி வடிவினை நோக்குங்கால் இரண்டு யகரங்கள் ஒன்றுடன் ஒன்று உள் நோக்கிப் புணர்ந்த நிலையினைக் குறிக்கும்,   

     தமிழில் உயிரெழுத்துக்களின் வரிவடிவங்கள் யாவும் வட்ட  வடிவத்துடனேயே தொடங்கும் எனும் ஆசீவக மரபின் கருத்துக்கொப்ப ஐகாரத்தின் மேற்பகுதியில் உள்ள யகரம் ஒரு வட்டச் சுழியுடன் தொடங்கப்படுகிறது,

யகரம் மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் இணைக்கப் பெறுவதே ஐகாரத்தினைத் தோற்றுவிக்கும் வரிவடிவாம், இந்த யகரம் இருபகுதியிலும் (மேலும் கீழும்) வெளி நோக்கியவாறு எழுதினால் ஆசீவகக் குறியீடான இருபுற முத்தலைக்கோல் தோன்றும்,  

இரண்டையும் ஒரு சிறு கோட்டால் இணைத்து இக்குறியினைப் பெறலாம். ஆசீவகர்களின் முதுமக்கள் தாழிகளிலும் இக்குறியீட்டினைக் கண்ட ஆய்வாளர்கள் யகரம் உயிரைக் குறிக்கும் எழுத்தாகையால், மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்

உள்ள யகரம் உயிர் பிறப்பதனையும் இறப்பதனையும் (அல்லது உயிர் ஒடுங்குதலையும்) குறிக்கும் குறியீடே இஃது எனக் கண்டுரைத்தனர்,

இவ்வளவு சிறப்புக்குரிய ஐகாரமும் அதன் இரு (மேல், கீழ்) பகுதிகளாய் இயங்கும் யகரமும் பிரிக்க இயலாதன,  இந்த ஐகாரம் பயின்று வரும் தமிழிக் கல்வெட்டுகளில் கூட யகரத் தொடர்புடனே எழுதப்பட்டுள்ள வழக்கினைக் காணலாம்,   

இந்த ஐகாரம் எனும் எழுத்திற்கான பிறப்பிலக்கணத்தினைத் தொல்காப்பியர் உட்பட இலக்கண ஆசிரியர் பலரும் வரையறை செய்துள்ளனர்

     தனி சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துகளுடன் சேர்ந்தும்   சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்.  இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙை, சை, ஞை, டை, ணை, யை, ரை, லை, ழை, ளை றை, னை ஆகிய எழுத்துகள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல் சகரத்துடனும் ஐகாரம் சொற்களுக்கு முதலில் வரும் என்கிறது. தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் டை, ரை, லை போன்ற எழுத்துகளும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். டைனோசோர், ரைன், லைலா என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.  

    ஐகாரம் தனித்து நின்றும், மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு முதலில் வரும். ஐகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் கடைசியிலும் தனியே  வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.

     ஐகார உயிர்மெய்களை வரிவடிவில் குறிக்கும் போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஐகாரத்தைக் குறிக்கும் சங்கிலிக் கொம்பு  குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது. எ.டு கை, பை, தை ஆகிய எழுத்துகளில் முதலெழுத்துகளுக்கு முன்னால் வருவது, இணைக்கொம்பு, இதனைச் சங்கிலிக் கொம்பு.என்றும் கூறுவர்.           

         ஐகாரக் குறுக்கம்    ஐகாரம் தன்னைச் சுட்டித் தனித்து எழுத்தாகக் கூறும் பொழுதோ பிறவற்றைச் சுட்டி ஓரெழுத்து ஒரு மொழியாகத் தனித்து நிற்கும் பொழுதோ இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். அந்த ஐகாரம் ஒரு சொல்லில் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும் பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையாகவும் இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்                             

 எ.கா: ஐந்து ஐகாரம் மொழிக்கு முதலில்1 1/2 மாத்திரை                                  வளையல் ஐகாரம் மொழிக்கு இடையில்1 மாத்திரை                                     மலை ஐகாரம் மொழிக்கு கடையில்1 மாத்திரை

   ஐ என்ற எழுத்து, சொல்லின் மூன்று இடங்களிலும் வந்திருப்பதைக் காணலாம் .ஐகாரக்குறுக்கம் பற்றி மாணாக்கருக்குக்  கற்பிக்கும் போது  ஐயர் கடையின்  வடை என்ற ஒரே தொடரில் மூன்று ஐகாரக் குறுக்கங்களையும் குறிப்பிடலாம்.   எனவே மேலே காட்டியுள்ள எடுத்துக்காட்டுகளில் உள்ள ஐகாரம், இரண்டு மாத்திரையில் இருந்து குறைந்து ஒரு மாத்திரையாகவே ஒலிக்கும். ஐகாரம் அளபெடுக்கும்போது குறைந்து ஒலிப்பதில்லை,சை, சைஇ இந்த இடத்தில் ஐகாரத்திற்கு இரண்டு மாத்திரையும் இகரத்திற்கு ஒரு மாத்திரையும் வரும்.

தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம் நையும் ஔ உம் முதல் அற்று ஆகும் என்னும் நன்னூல் 95 ஆம் நூற்பா தேவையில்லை அய் எனப்பயன்படுத்தினால் ஐகாரக் குறுக்கம் செல்லுபடியாகாது.                  

    ஆதலால் அய் என்பதற்கு எங்குமே ஒன்றரை மாத்திரை மட்டும் தான்.அய் தனித்து இருந்தாலும் ஒன்றரை மாத்திரை தான்;  மொழிக்கு முதலில் இருந்தாலும் 1 1/2 மாத்திரை தான் மொழிக்கு நடுவில் வந்தாலும் ஒன்றரை மாத்திரைதான்.மொழிக்கு கடையில் வந்தாலும் அதே ஒன்றரை மாத்திரை தான். ஐகார அளபெடை கிடையாது ஐகாரம் அளபெடுக்கும் போது தனக்கு இனமான யை பெற்று வரும் என்ற இலக்கணம்  தேவையில்லை.

    ஐக்கு மாறாக அய் என எழுதுவதாலும் ஔ க்கு மாறாக அவ் என எழுதுவதாலும்  அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது எழுத்தும் முதல் எழுத்து என்ப என்னும் தொல்காப்பிய முதற்நூற்பா தேவையில்லை இ ஈ எ ஏ  ஐ அங்காப்போடு

அண்பல் முதல் நா விளிம்புற வருமே என்ற நன்னூல் நூற்பா தேவையில்லை

ஒவ்வொரு தமிழ் பாடலும் மாத்திரை அளவை கொண்டே உருவாக்கப்படுகின்றன. அங்கு ஐகாரக்குறுக்கமின்றி அமையாது

 

செய்யுளில் அளபெடுக்கும் இடங்களில் குழப்பமேற்படுத்தும்.
சான்று     ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன், அணி-இழாஅய்!...."
............................சிலப்பதிகாரம்:கட்டுரைகாதை:19-21

அணி-இழாஅய் என்ற சீர் இன்னிசை அளபெடையாக வருகிறது.இது அணியிழையாள் என்ற சொல் விகாரம் பெற்று அணி-இழாய்
ஆகி, மேலும் அளபு எடுத்து வந்ததாகத் தெரிகிறது.ஒரு பேச்சுக்கு, ஒரு செய்யுள்/கவிதை வரி இப்படி அமைகிறது என்று வைத்துக் கொள்வோம். "அணி-இலாஅய் அடிகள் காண்குவம். " என்று வருமானால்இது அளபெடையா, அல்லது ஐயடிகளைச் சொல்கிறதா என்ற குழப்பம் வரும்.

           ஐ என்பது தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

"ஐ" என்பது ஒரு சொல்; அஃது எழுத்து மட்டுமல்ல. ஆகவே "ஐ" யை இழந்தால் ஒரு முக்கியமான சொல்லை இழக்கிறோம். எழுத்தை மாற்றுகிறோம் என்று சொற்களை இழக்கக் கூடாது..

 

1) திருக்குறள்: ஐ எழுத்தினால் ஆரம்பமாகும் குறள்கள் = மொத்தம் 4.

2) என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் - திருக்குறள் 771

3.ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி, (எண்ணுப்பெயர்)

தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை" (27:174-175)

4.பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,

ஐ! என்றாள், ஆயர் மகள் ..[வியப்பு]; (ஆய்ச்சியர் குரவை) (உரிச்சொல் - ஒலிக்குறிப்பு - 'ஐ வியப்பு ஆகும்' - தொல்காப்பியம் 868)                                                      

 5) அகநானூறு

பகலிலும் அகலா தாகி யாமம்

தவல் இல் நீத்தமொடு யெனக் கழிய.. [பைய]; (அகநானூறு :305) குறிப்பாக மேற்சொன்ன அகப்பாடலை முழுதுமாகப் படித்துப் பார்த்தால்தால் அந்த "ஐ" யின் வலிமையை உணரமுடியும்.அந்த அகப்பாட்டு எடுத்து வீசுகின்ற துயருக்கும் சூழலுக்கும்இந்த ஐ என்ற ஒரு சொல் பெரும்பங்கு வகிப்பதை அதைஆழ்ந்து படிக்கும்போது உணரமுடியும்.

6 தேவாரம்

பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே

இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.(தேவாரம்)-(ஆறாம் திருமுறை; பாடல் 95; அப்பர்.) இங்கே ஐய, ஐயோ என்ற இடங்களில் இருக்கும் ஐகளை அய் என்று மாற்றிப் படிக்க மனம் ஒப்புதில்லை.

 

7. பெரியபுராணம் : புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி. (பெரியபுராணம் தேவார திருவாசக நூல்களில் ஐ என்ற எழுத்தும் ஓ என்ற எழுத்தும் பயன் படுத்தப்படும் இடங்கள் மிக நுண்ணியமானவை. அவற்றை இழந்தால் அந்த இடத்தின் இதம் கெடுகிறது போன்றொரு உணர்வு இருக்கிறது.
  "புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி" என்பது
பெரியபுராணத்தில் வருகின்ற அடி. இதில் ஐயடிகள் என்ற சொல்லினைக் காண்க.
"ஐ அடிகள்" என்பதில் ஐ என்பது சொல். அது வியக்கத்தக்க,போற்றத்தக்க, அல்லது நுண்திறன் வாய்ந்த அடிகள் என்ற பொருளைக் கொடுக்கிறது. இந்த ஐ என்ற சொல்லைத்
தூக்கினால் இம்மாதிரியானப் பயன்பாடுகள் பழுதடைய வாய்ப்பிருக்கிறது.
(ஐந்து அடிகள் என்று பொருள் கொண்டாலும்ஐ யின் தனிச்சிறப்பு இருக்க வேண்டியஅவசியத்தை நோக்குக.)

ஆதலின் "ஐ" யின் இழப்பு, ஒரு எழுத்து, ஒரு சொல்,அதன் அகமான ஒலிப்பு என்ற மூன்றையும் இழக்க வைக்கிறது                   

8 ஆட்டு அயர்ந்து அரி படும்  விரை மாண் பகழி பரி 10/97

நீர்விளையாட்டை ஆடிக் களித்து, வண்டுகள் மொய்க்கின்ற, மணத்தினால் மாட்சிமையுடைய ஐந்து மன்மத அம்புகளின்

9.கை ஏந்து  அகல் நிறைய நெய் சொரிந்து நெடு 102

கைகளில் ஏந்தியிருக்கின்ற அழகுடைய தகளி நிறைய நெய் சொரிந்து

10 12. என்றாலே தலைவன், காதலன் என்றொரு பொருள் உண்டு.

வேப்ப மரம் பூக்கும்பொழுது திரும்பிவிடுவதாகக் கூறிப் பிரிந்து சென்ற தலைவன் அவ்வாறு வரவில்லை.புதிதாகப் பூத்த வேப்பம்பூ தலைவன் இன்றி வீணாகிறதே எனத் தவைவி வருந்துகிறாள்..இங்கு தன் காதலனை என்று குறிப்பிடுகிறாள்.

கருங்கால் வேம்பின் ஒன்பூ யாணர் என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ   (குறுந்தொகை

 11. ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று கலி 55/9

(நெற்றி) வியப்படையும் வகையில் தேய்ந்திருக்கிறது, ஆனால் அது பிறையும் இல்லை

12.”தமிழ் மொழியில் மிக உயர்வான ஒரு சொல் ஐயாஎன்பதாகும் என்றும், அந்தச் சொல் பயின்றுவரும் கவிதையில், அதனால் விளிக்கப்படுகிறர் மிக உயர்ந்த நிலையில் வைத்துப் பிரியமாக போற்றப்படுவர்என்பதாகும்

13. ஐ என்றால அழகு என்றொரு பொருளுண்டு. அழகியது என்பதனை முன்னாளி்ல் ஐது என்பர். அழகாக மழை பெய்கிறது என்பதை ஐது வீழி பெயல்எனச் சிறுபாணாற்றுப்படைக் குறிப்பிடுகிறது.

14.தமிழகத்தின் பழைய இயற்கைப் பிரிவுகளை ஐந்திணைஎன்றழைத்தனர்.   அவையாவன: குறிஞ்சி(மலை), முல்லை(காடு), மருதம்(வயல்), நெய்தல்(கடல்), பாலை.

15.ஐ என்பதை தமிழில் மிக உயர்ந்த பெரியோர்களைம், மன்னர்களையும், சான்றோர்களையும் விளிக்க அதனுடன் யா இணைந்துஐயாஎன்கிற வழக்கு தமிழ் இலக்கியங்களிலும் நடைமுறையிலும் பயிலப்படுகிறது.

16.  (பாட்டிசைப் பயன்பாடு) நெடிலாக மட்டுமல்லாமல் செவ்விசையில் ஓர் சுரமாகவும் உள்ளது. அய் அதற்கு மாற்றாகாது.

                       இலக்கணத்தில் ஐகாரம்

என்றாலே வியப்பின் அடையாளமாகும்.

     ஐஎன்பது ஓர் உரிச்சொல்                                                                       பொருள் வியப்பு இலக்கணம்"ஐ வியப்பு ஆகும்" - தொல்காப்பியம் 2-8-88 

சான்று "ஐதே காமம்" - நற்றிணை 143                                                              

இரண்டாம் வேற்றுமை யுருபு. (நன். 296.)
 சென்றனை முன்னிலை யொருமை                                                         

பறவை-  விகுதி. (நன். 140, உரை.)                                                     

பண்டைக்காலம்- ஒரு சாரியை. (நன். 185, உரை.)
 பார்வை
- வினைமுதற் பொருள் விகுதி மற்றும் செயப்படுபொருள் விகுதி: கருவிப்பொருள் விகுதி. (நன். 140, உரை.)
கொலை
- தொழிற்பெயர் விகுதி.                                                          

 தொல்லை  பண்புப்பெயர் விகுதி. (நன். 140, உரை  .

  மதிப்புக்குரியோரை ஐயா என்று அழைக்கின்றோம்.  இது போன்று ஐ என்ற எழுத்துடன் துவங்கப் பெறும் சொற்களும், முடிபு பெறும் சொற்கும் மிகுந்த சிறப்புடைய சொற்களாக இருக்கும். பெரும்பாலும் ஐ வரும் சொற்கள் எல்லா சிறப்புக்குரிய  பொருள்களையே தருகின்றன. தலைநகரங்களாக இருந்த ஊர்கள் என்றே முடிகின்றன.மதுரை, கானை(காளையார்கோயில்), புதுகை, முகவை, நெல்லை, சென்னை, ஐதராபாத் கோவை ஆறுகளில் சிறந்தது  கங்கை யமுனை, வையை                                                                                         மேற்சொன்னக் காட்டுகளில், "ஐ" வரும் இடங்களில் "அய்" என்று போட்டால் ஒன்றும் பிழை நேர்ந்து விடவில்லை. ஆனால்ஒவ்வொரு "அய்" யும் ஒரு மாத்திரையை விழுங்கி விடுவதைக்காணமுடிகிறது   "ஐ" என்பது ஒரு சொல்; அஃது எழுத்து மட்டுமல்ல. ஆகவே "ஐ" யை இழந்தால் ஒரு முக்கியமான சொல்லை இழக்கிறோம். எழுத்தை மாற்றுகிறோம் என்று சொற்களை இழக்கக் கூடாது..                                                                               என்பது ஒரு சொல் என்று அறிவோம். அந்தச் சொல் எப்படி வந்தது என்று பார்க்குங்கால் மனிதனின் இயல்பான ஒலிப்பில் இருந்தே வந்திருக்கின்றது.                   

       "ஐ" என்பது நாம் இயல்பாக ஒன்றைப் பார்த்து வியக்கும் போது சொல்வது. "ஐ அழகா யிருக்கே!" என்று சொல்வது இயல்பு. இந்த "ஐ" யை உச்சரிப்பதற்கும் சொல்வதற்கும் அதாவது வியத்தற்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவையேயில்லை. ஏனெனில் இது இயல்பான மாந்த ஒலி! அப்படிப்பட்ட வியப்பைக் குறிக்கும் சொல்லை விட்டுத்தரலாமா?.
     "ஐ" என்பது இன்னொரு வகையில் நாம் இயல்பாகப் பயன்படுத்துவோம்.
இதனை மாடு கன்றுகளோடு பழக்கப் பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.
மாடுகளை / கால்நடைகளை முடுக்குதற்கும் தடுக்குதற்கும் இந்தச்
சொல்/ஒலி பயனில் வரும். (இதைக்கொங்கு நாட்டில் நொச்சுக்கூட்டுதல் என்பர்.) மாடுகளை அமைதிப்படுத்தற்கு "ஐ...ஐ......" என்று சொல்வார்கள்.    அமைதிப்படுத்தும் போது மெலிந்து ஒலிப்பர். அது அழகான மெல்லிய ஓசையாக வரும். முடுக்குதற்கும் "ஐ ஐ" என்று வலிந்து ஒலிப்பார்கள்.
(மாடுகளுக்கு முகமன் கூறும் சொல்லே இந்த "ஐ" தான்).நாமெல்லாம் ஆங்கிலத்தில் hi (ஐ) சொல்வது போலே)இந்த இயல்பான ஒலிப்பை உள்ளடக்கிய ஐ நிலைக்க வேண்டும்.
ஆக, ஐ என்று எழுத்து சொல்லாகத் தனித்து நிற்கையில் அதன் இரண்டு மாத்திரை ஒலிப்பை "அய்" என்று எழுதிக் கெடுத்து விடுகிறோம்  என்று   உணருவோம்.                                                                    ஐய* நின்னுடை அன்பர்கள் எல்லாம்   அழிவில் இன்பமுற் றருகிருக் கின்றார்
வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய   வீணனேன்இங்கு வீழ்கதிக்கிடமாய்
வைய வாழ்க்கையின் மயங்குகின் றனன் மேல் வருவ தோர்ந்திலன் வாழ்வடைவேனோ செய்ய வண்ணனே ஒற்றியம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே எனும்பாடலில் 2,3,4 ஆம் அடிகளில் வெய்ய ,வைய, செய்ய இருப்பினும் அதற்கு ஏற்றாற் போல்  முதல் ஐ க்கு மாறாக அய்  என எழுதப்படவில்லை.ஐ என்று எழுதி உள்ளதைக் கவனிக்கவும்.

       தமிழ் எழுத்தின்முறை(தன்மை)பற்றித்தொல்காப்பியம் பாயிரம்கூறுகிறது. மயங்கா மரபு எழுத்து முறைகாட்டி என்கிறது அதாவது ஓரெழுத்தின் தன்மை மயக்கப்பொருள் தருமாறு அமையக்கூடாது என்பதாகும்..தமிழே தமிழரின் சிறப்பு ஆகும்.சங்கம் வைத்து ஆராய்ந்து செம்மைப்படுத்தப்பட்ட மொழி தமிழ் ஒன்றே யாகும்.ஐ என்ற எழுத்துடன் சில தமிழ்ச் சொற்கள் தொடங்குகின்றன. ஐ என்ற எழுத்துடன் பல தமிழ்ச் சொற்கள் முடிகின்றன. 

   தனிச் சிறப்புடைய என்ற எழுத்தை அய்என்று பிழையாக எழுதித் தமிழின் எழுத்துக்களையும் சொற்களையும் சிதைக்க முற்படுகின்றனர் சிலர். ஐகாரத்தினை ஒழித்துக் கட்ட அதிகம் படித்த பலரும் ஆதிக்கம் செலுத்தும் சிலரும் முயல்வதாகத் தெரிகிறது. இதன் பின்னூற்றை ஆயுங்கால், ஓர் இனத்தினைச் சிதைக்க வேண்டுமாயின் அவ்வினத்தின் மொழியினைச் சிதைக்க வேண்டும் என்பது செயலாக்கச் சிந்தனையின் அடிப்படையாகும், எனவே, தமிழினத்தினை அழிக்க-அதன் தனிச்சிறப்பினையுடைய மொழியினை அழிக்க வல்லாதிக்க வழிகாட்டியும் நிறுவனருமான,ஈரோடு இராமசாமி நாயக்கர் எனும் ஒருவரால் தொடங்கப் பட்ட இந்த அழிவு வேலைக்கு எழுத்துச் சீர்திருத்தம்என்று பெயர். பெரியாரின் சமூகப்பணிகள் போற்றுதற்குரியன என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு  இல்லை, என்கிற போதும் மொழிபற்றியப் பெரியாரியக் கருத்துகள் பலவற்றில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை.  இவரது கருத்துப்படி ஐகாரம் அய்காரமாகக் குறிக்கப்படும். ஐகாரம் தனது இரண்டு மாத்திரைக்கான வரிவடிவினை இழந்து ஒன்றரை மாத்திரைக்கான வரிவடிவமாகச் சிதைக்கப்படுவதாகும்,இந்த எழுத்துச் சீர்திருத்தத்தினை முன்மொழிந்த ஈ .வெ.இரா தமிழறிவோ அல்லது இலக்கண அறிவோ துளியும் இல்லாதவர் என்பது நாடறிந்ததே ,ஈ.வெ.இரா எந்த நாளிலும் தமிழ் மொழியின் மீது பற்றுக்  கொண்டவர் அல்லர். மாறாக காட்டுமிராண்டி மொழியென்றே கூறிவந்ததாகக். கூறுவர். தமிழர் அடையாளத்தினை வலுக்கட்டாயமாகத் தொலைக்கச் செய்து திராவிட அடையாளத்தினைத் தமிழர்கள் மீது திணித்தவர் அவர், அத்தகு அரசியலால்தான் தமிழரல்லாத இனங்கள் தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஆளும் அவலம் ஏற்பட்டது, இக்கருத்தினை ஒருசில சான்றோர் அவ்வப்போது முன் வைத்த போதெல்லாம், திராவிட மாயைக்கு ஆளாகிப் போய்விட்ட திராவிடத் தமிழர்களும், வாக்கு வணிகர்களும் உண்மைக்குப் புறம்பாய் மழுப்பியும் மயக்கியும் தமது வல்லாதிக்கத்தினை வழிமொழிந்து வருகின்றனர், தமிழர்களைத்  திராவிட மாயைக்கு ஆளாக்கித் தமிழரல்லாத இனங்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்குவதற்கான பல்வகை சூழ்ச்சிகளில் ஒன்றாகவே இந்த மொழிச்சிதைவு எழுத்துச் சீர்திருத்தம் இருப்பதனை,தமிழர் உணர்ந்து கொண்டு இந்த "ஐ"காரம் மட்டுமன்றி ஏனைய எழுத்து வடிவங்களையும் காக்க முனைவோம்.

      ஐ என்பதை அய் என்று எழுதிவிடலாம்.  ஐ என்ற எழுத்துத் தேவையில்லைஎன்று சங்கப்புலவர் அறியாரோ?  ஐயா வை அய்யா என்று எழுத வைத்ததில் திராவிடத்திற்கு மிகப் பெரிய பங்கு இருப்பதாக கருதுகிறேன் . கமலின்  மக்கள் நீதிமய்யம் உருவான பிறகுதான் இந்த பழக்கம் தமிழர்களுக்குள்அதிகப்படியாகவந்துள்ளது. அவர் மையத்தை மய்யம் என்று போட்டவுடன் நாமும் மய்யம் என்பது தான் உண்மையான தமிழ்ச் சொல் என்று நினைத்துக் கொண்டோம்.  இதுவும் நாம் அறியாமலேயே நம் அரை மயக்க நிலையில் அவர்கள் செய்த மன விவசாயம்தான். இப்போது மக்களின் பயன்பாட்டில் ஐயா என்பது குறைந்து அய்யாவே அதிகமாகிவிட்டது. இது எப்படி நடந்தது என்பதை சிந்தியுங்கள்! மன விவசாயம் என்றால் என்னவென்று முழுமையாக புரியும். இத்தகு ஐகாரத்தினை ஒழித்துக் கட்ட அதிகம் படித்த பலரும் ஆதிக்கம் செலுத்தும் சிலரும் முயல்வதாகத் தெரிகிறது.

ஐந்து ஐகாரம் மொழிக்கு முதலில்- 1 1/2 மாத்திரை. வளையல் ஐகாரம் மொழிக்கு இடையில்- 1 மாத்திரை. மலை- ஐகாரம் மொழிக்கு கடையில்- 1 மாத்திரை.  இப்போது ஐ க்கு பதிலாக அய் பயன்படுத்தும்போது கீழ்க்கண்ட உயிர்மெய் எழுத்துக்களையும் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்.
 ஆனால் மொழிக்கு முதலில் அய்யை பயன்படுத்திவிட்டு ஏனைய இடங்களில் ஐ யின் உயிர்மெய் எழுத்துக்களாகிய கை ஙை சை ஞை டை ணை தை நை பை மை யை ரை லை வை ழை ளை றை னை  பயன்படுத்துவது தான் சரியில்லா  செயல் . உதாரணமாக அய்- யை ஏற்றுக்கொண்டவர்கள் இனி அமைதி க்கு பதிலாக அமய்திஎன்றே எழுத வேண்டும் பொறுமைக்குப் பதிலாக இனி பொறுமய் என்றே எழுத வேண்டும்  ஆனால் மொழிக்கு முதலில் மட்டும் ஐ யை விடுத்து அய் என எழுதுவது தேவையில்லாதது தானே? அய் உயிரெழுத்தும்  அல்ல மெய் எழுத்தும் அல்ல உயிர்மெய் எழுத்தும் அல்ல. ஐ ஒரெழுத்துக்கு மாறாக இரண்டு எழுத்து எதற்குத் தேவை. ஐ என்னும் ஓரெழுத்திற்கு 2 மாத்திரை. அய் என்னும் இரண்டு எழுத்திற்கு 1 ½ மாத்திரை அப்படியானால்  அதன் பயன்பாடு ஏன் வேண்டும்?  ஐ என்பது உயிரெழுத்து அய்உயிரு, மெய்யும் கலந்து வந்த இரண்டு எழுத்து ஓர் ஒலிக்கு ஒருவடிவமே இருக்க வேண்டும் இரண்டு வடிவங்கள் எப்படி வரமுடியும் அதன் பயன்பாடு ஏன் வேண்டும்?                                                                                        
க்+ஐ =கை 2 மாத்திரை
க்+அய்=கய்
1 1/2 மாத்திரை                                                                          இனியும் அய்யின் பயன்பாட்டு வேண்டுமா? இல்லை ஐயின் பயன்பாடு வேண்டுமா? நீங்களே முடிவு செய்யுங்கள்.  

  "ஐ" என்று விரல்களால் எழுதும்போது வளவு நெளிவுகள் நிறைய இருக்கிறது என்று சிலர் சொல்லக்கூடும். இதனை நீக்கி "அய்"என்று எழுதினால் இதை விட அதிக சுழிப்புகளைத்தான் போடவேண்டி உள்ளது ஐ என்று எழுதாமல் அய் என்று எழுதினால் இரண்டு எழுத்துக்களின் இடத்தை எடுத்துக் கொள்கிறது. இலக்கணக் கட்டில் மெய்யெழுத்துக்கள் கணக்கிடப் படுவதில்லை. ஆனால்அய் என எழுதினால் அது ஒரு இடத்தை அடைத்துக் கொள்ளவே செய்கிறது. காகிதத்தில் எழுதினாலும், கணியில் எழுதினாலும் தேவையில்லாமல் அதிக எழுத்துக்களை நாம் பெருக்குகிறோம்.
ஐஐந்து (4 எழுத்துக்கள்) = அய்அய்ந்து = அய்யய்ந்து (6 எழுத்துக்கள்)
    ஐகாரத்திற்கு அப்படி யென்ன தனிச் சிறப்பு?  ஐயா - இந்தச் சொல்லானது அரசன், ஆசான், குரு, மதிப்பிற்குரியவர்கள் மற்றும் மேலானவர்களைக் குறிப்பது.அதாவது நமது ஆசிரியரை, அலுவலக மேலாளரை மற்றும் தலைவர்களை குறிப்பிட ஐயா என்ற சொல்லை பயன்படுத்தவேண்டும்.இந்தத் தெளிவோடு இனிவரும் காலங்களில் பேசும்போதோ, எழுதும்போதோ பயன்படுத்த பழகிக்கொள்வோம். திருவள்ளுவரை ஐயன் திருவள்ளுவர் என்று வழங்கும் இந்த அரசு திருவள்ளுவராலும் முதுபெரும் மொழி ஆர்வலர்களாலும் போற்றப்படும், "ஐ"காரத்தினை காப்பதன் மூலமாக மட்டுமே திருவள்ளுவரையும் அவர்தம் அறிவு மரபினையும் ஆன்றோர் வளர்த்த தமிழையும் உண்மையில் மதிப்பதாகக் கருதப்படும் என அறிக.

அரசுச்செயலரின் குறிப்பாணை எண் 47041/தி-1/79 நாள் 23-5-1979 இவ்வாவாணை ஐ,ஔ உயிரெழுத்துகளின் வரிவடிவங்கள் கைவிடப்படாமல் முன்பு  போலவே(ஐ,ஔ) தொடர்ந்து நடைமுறை வழக்கில் இருந்துவரும் என்ற கூறுகிறது. எந்த அரசு இந்த ஆணையை வெளியிட்டதோ அதே அரசைச் சார்ந்தவர்தளே அந்த ஆணையைப் புறக்கணித்து  அய், அவ் என எழுதிவருவது என்னென்பது ஆகவே, "அய்" என்று எழுதக் கூடாது.   உரையிலும் சரி கவிதையிலும் சரி.

இனியும் அய்யின் பயன்பாட்டு வேண்டுமா? இல்லை ஐயின் பயன்பாடு வேண்டுமா? நீங்களே முடிவு செய்யுங்கள்.
 தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன், தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் பேரூர் ஆதீனம் 9788552993