Saturday 15 September 2018

கையறுநிலை வாலி


                                  வாலி
வருசம்           பலதான்           கடந்தாலும்        அவதாரப்
புருஷன்           நீதான்             என்றும்           புவியில்
கவிதை           என்னும்           கடலைக்          காகிதத்தில்
குவித்து           அடக்கிய          வித்தகன்          நீதான்
பெண்ணால்        அழிந்தான்         இராமாயண        வாலி
பென்னால்         வளர்ந்தான்        கலியுக            வாலி
முற்கால          தற்கால           முதல்வர்கள்       முதலாக
பிற்கால           நாயகரும்         பின்னனிப்         பாடகரும்உன்
கற்கண்டு          சொல்லைத்தான்   பற்கொண்டு        மென்றார்கள்
ஈயாத             கஞ்சனையும்       எழுத்தறியா        மூடனையும்
காயாத            மரத்தையம்       கவியால்          பாடியதால்
தேயாத           உன்புகழில்        சிறியதொரு        கரும்புள்ளி
பாண்டவர்         பூமியும்           அவகாரப்          புருசனும்
மாண்டாலும்       உன்புகழை        மாநிலத்தில்       பறைசாற்றும்
          வாலி             உன்புகழ்         என்றென்றும்       வாழி   


No comments:

Post a Comment