Tuesday 7 May 2024

தொல்காப்பியத்தில் இறைநெறி கொள்கைகளும் கோட்பாடுகளும்

 

தொல்காப்பியத்தில்  இறைநெறி கொள்கைகளும் கோட்பாடுகளும்  

                தொல்காப்பியச் செம்மல்   புலவர் ஆ.காளியப்பன்.    அ.பே.எ. 9788552993

முன்னுரை:

    ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் செந்தமிழ்ப் புலமை மிக்கோர் பாராட்டும், நமக்கு முழுமையாய்க் கிடைத்த முதல் நூலாகும். மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் என்பதை நன்கு உணர்ந்து மயங்கா மரபின் எழுத்து முறை காட்டியவர் தொல்காப்பியர். அவர் பழந்தமிழர்களின் இறை உணர்ச்சியையும், சமயக் கோட்பாடுகளையும் தத்துவ அறிவையும் தமது நூலில் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் கூறியுள்ளார்.  

    மக்கள் தங்கள் மனப்பாங்கு, அறிவுநிலை, வாழும் சூழ்நிலைக்கேற்ப  ஒவ்வொரு கடவுளை வழிபட்டுத் தங்கள் கடமைகளை ஆற்றி வந்தனர். அவர்கள் வழிபடும் தெய்வங்கள் அவரவர்களுக்குப் பக்கத்துணையாக நின்று காக்கட்டும் என்று தொல்காப்பியர்

வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்                                                                                                                            

பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து                                                                                                                            பொலிமின்!   (தொல்.பொருள்.செய்யுள்422) என்று வாழ்த்துகிறார்.  

 

தொல்காப்பியர் இறை நம்பிக்கை உடையவர் என்பதற்கு அகச்சான்றுகள்

காமப்பகுதி கடவுளும் வரையார்” (தொல். நூ. 1029)

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றுங்  

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல். நூ. 1034)

அமரர்கண் முடியும் அறுவகை யானும்” (தொல். நூ. 1027) என்று, தேவர் நிலைமையில் வைத்து வாழ்த்துதற்குரிய அறுவகை நிலையான சான்றோர், புலவர், வேந்தர், ஆன், மழை, உலகம் என அறுவகையில் வாழ்த்துதல் மரபெனவும்தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவிஎன்றும் தொல்காப்பியர் சுட்டுகின்றார். தெய்வம்என்ற சொல் தொல்காப்பியத்தில் ஒன்பது  இடங்களில் இடம்பெற்றுள்ளது. இறை’, ‘இறைவன்என்ற சொற்கள் பண்டைய காலத்தில் தலைவனைக் குறிக்கும் சொல்லாகவும் காணப்படுகிறது

இறைநெறி தோன்றக்காரணம்: தொடக்க காலத்தில் இயற்கையின் அச்சந் தரும் செயல்களே மனிதனை கடவுள் நெறிக்கு இட்டுச் சென்றன என்பது மானிடவியலாளர்  சிலரின் கருத்தாகும். மனிதன் தன் ஆற்றல் ஒரு வரம்புக்கு உட்பட்டது என்பதை உணர ஆரம்பித்த நிலையில், கடவுள் கோட்பாடு உருவாகியது என்பர். தன் அறிவுக்கும், ஆற்றலுக்கும் முறையே புலப்படாத உட்படாதவற்றின் மீதான அச்சம் காரணமாக  மனிதன் முதலில் இயற்கையை வழிபடத் தொடங்கி பின்னர் கடவுள் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினான். அவை வழிபாட்டு மரபாய்ப் பின்னர் மாறியது                                                                                                      

 

 

 

                       பண்டைய  தமிழரின் தெய்வ வழிபாட்டு முறைகளுக்குக் காரணமாக     அச்சம், முற்காப்பு,  நன்றியறிவு, பாராட்டு, அன்பு, கருதுகோள், அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இறை வழிபாடு தோற்றம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார். அவ்வடிப்படையில் பண்டைய தொல்காப்பிய காலத் தமிழ்ச்சமூக தெய்வக்  கோட்பாடுகள் ஐந்நில மக்கள் வாழ்வியலுக்கேற்ப உருவாகி இருக்கின்றன

  தெய்வம்என்பது கருப்பொருளில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. கருப்பொருளானது நிலத்தில் காலத்தால் கருக்கொள்ளும் பொருளாகும். இவை தோன்றி நின்று மறைவனவே யாகும். இதன் மூலம் தெய்வம்என்று குறிப்பிடப்படுவது இறந்த முன்னோர்களே எனக் கருதவும் இடமுண்டு. அவர்கள் நினைவாக கற்களை  நட்டு (நடுகல்) அவற்றுக்குப் பூசனைகள் செய்துள்ளனர். (காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தல்’). இவற்றால் கூட பல தெய்வ வழிபாடுகள் தோன்றியிருக்கலாம்

 

நிலத்திற்கு ஏற்ப வழிபாடு                                                                       மாயோன் மேய காடுற உலகமும்           

 சேயோன் மேய மைவரை உலகமும்

 வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

 வருணன் மேய பெருமணல் உலகமும்

 முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (தொல். நூ. 951) என்றும் . மறம்கடை கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே. (தொல். நூ. 1005)  என்றும் தொல்காப்பியம் கூறுகிறது..           

     ஐந்திணைகளாகப் பகுக்கப்பட்டிருந்த பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சிக்குச்சேயோன்என்ற முருகனும், முல்லைக்கு மாயோன்என்ற திருமாலும், மருதத்திற்கு வேந்தன்என்று குறிப்பிடப்படுகின்ற இந்திரனும்(ஆய்வுக்குரியது), நெய்தலுக்கு வருணன்  என்ற தெய்வமுமாக நானிலக் கடவுளைத் தொல்காப்பியர் வெளிப்படுத்துகின்றார் பாலை நிலத்திற்குக் கொற்றவையும் (காளி என்றும் அழைப்பர்) தெய்வமாய் இருந்துள்ளது. தாம் வழிபடுகின்ற தெய்வம் ஊரைக் காக்கும் என்ற நம்பிக்கை தொல்காப்பியர் கால மக்களின் நம்பிக்கையாக இருந்தது, திணைத் தெய்வங்கள் வழிவழி வணங்கப்பெற்று, காலவோட்டத்தில் தமிழர் வழிபாட்டு மரபில் மாற்றங்கள் நிகழ்ந்து புறச்சமயங்கள் வந்து கலந்து கலப்பு வழிபாட்டு மரபுதோன்றிவிட்டது

 

        நிலத்தின் நால்வகைப் பகுப்பு நிலைத்தது இல்லை.காலவட்டத்தில் எல்லாம் மாறக்கூடியது. இதனைத் திணைமயக்கம் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ஒருகாலத்தில் எல்லாம் அழிந்து ஒழிந்து போகும்.இக்காலமே ஊழிக்காலம் அவ்வூழிக்கு முதல்வனாக நிற்கும் ஒருவனே கடவுள் என்ற எண்ணமும் தோன்றியது. இவ்வும்மையைத் தொல்காப்பியரும் ‘ஆங்ஙனம் விரிப்பின் அளவிறந்தனவே பாங்குற உயர்ந்தோர்  பன்னுங் காலை  (செய்யுளியல் -50) மேலும் எல்லா மக்களும்  வானுலகம், அமரர், கூற்றுவன், பேய் முதலியவற்றிலும்  நம்பிக்கை   கொண்டிருந்தனர். 

 

 

 

முடிவுரை: உருவமும் பெயரும் இல்லாத முழுமுதற் கடவுள்  தம் அன்பர்கள் அன்பால்  அழைத்த ஏதாவது ஒரு பெயரைக் கொண்டு,அவர் நினைத்த வடிவைத் தன் வடிவாய்  ஏற்றுக் கொண்டு அவர்களது இதயமாம் மலர்மிசை ஏகுவான்.இக்கட்டுரை உருவாக பல நுனித்தகு புலவர்களின் நூல்கள் உதவின. அவ்வறிஞர்களின் மாணடி போற்றி நிறைவு செய்கிறேன்.   ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்            

தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்- பேரூர் ஆதீனம் 9788552993