Saturday 11 August 2018

பிழையின்றி எழுதுவோம்

               பிழையின்றி எழுதுவோம் இன்றைய இலக்கணம்16-12-16
      வெண்ணீர், தீவணம், சமர் பணம், சமர் பனம் என்று  வகை வகையான தவறுகள் கண்ணில் படுகின்றன. ஆனால் அதை எல்லாம் விட. வாழ்த்துக்கள் என்று எழுதவேண்டுமா? இல்லை வாழ்த்துகள்என்று எழுத வேண்டுமா?”
  இதுக்கு பதில் சொல்வதற்கு முன்னால்  ஒரு கேள்வி  . ஒருத்தரைப் பற்றிக் கிசுகிசுவாப் பேசினா வம்பு என்று சொல்லுவோம். இதோட பன்மை என்ன?”
   வம்பு இது ஒருமை. இதோட பன்மை வம்புகள். ஆமாம். வம்புக்கள், “இதில் இவ்வளவு தெளிவா இருக்க. அப்போ வாழ்த்து ஒருமை அதோட பன்மைக்கு  மட்டும் ஏன் இவ்வளவு குழப்பம்?”
வாழ்த்துகள் என்று தான் சொல்ல வேண்டும்.
  அதே மாதிரிதான் பாட்டுகள், எழுத்துகள் எல்லாமே. இங்கே எல்லாம் வலி மிகாது.
       இப்போ எதாவது ஒரு நிகழ்வு நடந்தா விருந்து கொடுப்பது வழக்கமா இருக்கு. விருந்து என்றால் பியர், விஸ்கின்னு சரக்கு இல்லாம இருக்கறது இல்லை. இதையே கொஞ்சம் தமிழ் மண் வாசனையோட விருந்து தரணும் என்றால் இந்த விஸ்கிக்குப் பதிலா கள்ளு கொடுக்கலாம். ஒருவரை வாழ்த்தத் தரும் கள் என்பதால் அதை வாழ்த்துக்கள் என்று சொல்லலாம்.
வாழ்த்துகள் என்றால் வாழ்த்துவது. வாழ்த்துக்கள் என்று சொன்னால் அப்படியே சியர்ஸ் சொல்லி வாய்க்குள்ள  கவுத்திக்கிறது   
   இந்த தப்பு எல்லா இடத்திலேயும் நடக்கறதுதான். ஒரு சினிமாப் பாட்டு பார்க்கலாமா?”
 பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்  என்று ஒரு பாட்டு இருக்கு தெரியுமா?”
. அந்தப் பாட்டில் முத்துக்கள் சிரிக்கும் நிலத்தி ல் என்று ஒரு வரி வரும். முத்து என்று சொன்னால் அதோட பன்மை முத்துகள்தான். ஆனா சந்தத்துக்காக அதை முத்துக்கள்என்று போட்டு இருக்கிறார்கள். இலக்கணப்படி முத்துக்கள் தப்புதான்.
எழுத்துக்கள்  கூட தப்பா? எழுத்துகள் தான் சரியா?”
எழுத்தாளர்கள்  சில பேரு எப்பவும் நான் இந்த பாருக்குப் போனேன் அந்த சரக்கை அடிச்சேன்னு குடிக்கிறதைப் பத்தியே எழுதுவாங்க பாரு. அதை வேணா எழுத்துக்கள்ன்னு சொல்லலாம். ஆனா எழுத்து என்பதன் பன்மை எழுத்துகள்தான்
    . என் கையில் இருக்கும் புத்தகம் என்னுடையது அல்ல.
அதுல என்ன தப்பு? ஒரு புத்தகம்என்று சொல்லும் போது அல்லஎன்று சொல்லக் கூடாது. இந்தப் புத்தகங்கள் என்னுடயவையல்ல. இப்படிச் சொன்னால்தான் சரி.
அப்போ  ஒரு புத்தகத்துக்கு என்ன சொல்லணும்?”
இந்தப்  புத்தகம்  என்னுடைய தன்று. இப்படித்தான் சொல்லணும்.
அஃதாவது ஒருமைக்கு அன்று. பன்மைக்கு அல்ல. இப்படித்தான் சொல்லணும்.  
  அன்று எல்லாம் இன்றைக்குப் பழக்கத்தில் இல்லை என்றாலும் இலக்கணப்படி எழுதும் பொழுதாவது சரியா எழுதவேண்டும். இதே மாதிரி அவன் தன் வேலையைச் செய்தான் என்றே எழுத வேண்டும். அதையே அவர் என்று வந்தால் அவர் தம் வேலையைச் செய்தார் என்றே சொல்லவேண்டும். அவர்கள் என்று பன்மையாக வந்தாலும் இதே மாதிரி அவர்கள் தம் வேலையைச் செய்தனர் என்றே எழுத வேண்டும்.
இதனால் தான் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா என்று பாட்டு எழுதினார்களா?”
ஆமாம் எந்தன், உந்தன், அவர்தம், அவர்கள்தம் என்று எழுதினால் தான் இலக்கணப்படி சரி
 இந்த இலவசம்  என்று சொல்லைப் பற்றிப் பார்போம்
 இன்றைக்குக் கூட கல்யாணம் மாதிரி விழாக்கள் ஆகட்டும் இல்லை ஒரு குருவைப் பார்க்கப் போகும் போது ஆகட்டும் வெற்றிலை பாக்கு எல்லாம் ஒரு தட்டில் வைத்துதான் பரிசு தரோம் இல்லையா? அதுக்கு இது உங்களுக்கானது. நீங்கள் திருப்பித் தர வேண்டாம் அப்படின்னு அர்த்தம். இப்படி இலையின் மூலம் தரும் பரிசுக்கு இலை வயம் என்று சொல்லி அது இலவசம் ஆயிற்று.
கட்சின்னு சொன்ன உடனே ஒரு விடயம் ஞாபகத்துக்கு வருதுடா. தேர்தல் வரப் போகுது. இப்பவே எதிர்மறையா பிரச்சாரம் செய்யக்கூடாது. நேர்மறையா செய்யுங்கன்னு சிலர் சொல்ல ஆரம்பிச்சு இருக்காங்க. இது ரொம்பத் தப்பான விடயம்.
 எதிர்மறையா பேசாதேன்னு சொன்னா நல்லதுதானே?!”
எதிர்மறையா பேசாதேன்னு சொல்ல வேண்டியதுதான். ஆனா அதுக்காக நேர்மறையாப் பேசுன்னு சொல்லக் கூடாது. ஏன்னா நேர்மறை என்று தமிழில் ஒரு சொல்லே கிடையாது. எதிர்மறைக்கு எதிரா இருக்கவேண்டும் என்று நேர்மறை என்று சொல்லுகிறார்கள்.  உண்மையில் speak positively என்று சொல்லவேண்டும் அறப்பேசுஎன்று சொல்லலாம். நேராகப் பேசு, நல்லவிதமாகப் பேசுன்னு எல்லாம் சொல்லலாம். ஆனால் நேர்மறை என்று சொல்லக் கூடாது.
மறைஎன்றால் வேதம்தானே. அது எங்க இங்க வந்தது?”
மறை என்றால் சொல் என்று ஒரு பொருள் இருக்கிறது.. எதிர்மறை என்று சொல்ல அது காரணமா இருக்கும். நேர்மாறு என்று சொன்னால் முற்றிலும் எதிரானது. எதிர்மறைக்கு நேர்மாறானது நேர்மறை இல்லை!”“எதிர்மறை கூட சேர்த்துதான் எழுதவேண்டும்.. எதிர் மறைஎன்று எழுதினால் முன்னாடி இருக்கும் வேதம் என்று பொருளாகிவிடும்.  
 . மங்கலம் / மங்களம், பவளம் / பவழம் இது எப்படி எழுதினாலும் சரிதான்னு பேசினோமே. அதே மாதிரி மதில் / மதிள், உளுந்து / உழுந்து இதெல்லாம் கூட எப்படி எழுதினாலும் சரிதான்.
உழுந்து  கூட சரியா?  
 கம்பராமாயணத்தில்
    உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும் என்று கம்பரே எழுதி இருக்கிறார். இந்த மாதிரி ஒரு எழுத்து வர வேண்டிய இடத்தில் வேற ஒரு எழுத்து வந்தாலும் பொருள் மாறாமல் வந்தால் அதற்குப் போலி என்றுபெயர்
போலியா? சாதாரணமாக ஒரிஜினலா இல்லை என்றால் தானே போலி என்று சொல்லுவோம்.
அதே பொருள்தான். ஒன்று போல இருக்கும் மற்றொன்று என்று சொல்லவேண்டும் அதைப் போல் +இருப்பது = போலிருப்பது என்று சொல்லுகிறோம். அதோட சுருக்கம்தான் போலி. எந்த எழுத்து மாறி வருது என்று பார்த்து அதை முதற் போலி, இடைப் போலி, கடைப் போலி என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.. ஆனை என்பதை யானை என்று சொன்னால் முதல் எழுத்து மாறி வருது. அதனால அது முதற் போலி. அதே போல் பவழம் / பவளம், உளுந்து / உழுந்து எல்லாம் நடுவில் இருக்கும் எழுத்து மாறி வருவதால்  இடைப் போலி. மதில் / மதிள் இதில் கடைசி எழுத்து மாறிப் போவதால் இது கடைப் போலி.
§  வாழ்த்துகள் என்பதுதான் சரி. வாழ்த்துக்கள் என்பது தவறு.
§  இதே போல் எழுத்துகள், முத்துகள், பாட்டுகள், வார்த்தைகள் என்றுதான் எழுதுதல் சரி.
§  ஒருமைக்கு அன்று. அல்ல பன்மைக்கு. (என் புத்தகமன்று, என் புத்தகங்களல்ல)
§  ஒருமைக்கு தன், பன்மைக்குத் தம் (அவந்தன், அவர்தம், அவர்கள்தம்)
§  இலை வயம் தரப்படும் பரிசு என்பதே இலவசம் என்றானது. வெற்றிலையில் வைத்துத் தரப்படும் பரிசைக் குறிப்பது இது.
§  எதிர்மறை என்பதை எதிர் மறை என எழுதுதல் கூடாது.
§  நேர்மறை என்ற வார்த்தை தமிழில் இல்லை.
§  மதில் / மதிள், உளுந்து / உழுந்து எப்படி எழுதினாலும் சரியே
§  ஒரு வார்த்தையில் ஒரு எழுத்து வர வேண்டிய இடத்தில் வேறு ஒரு எழுத்து வந்து பொருள் மாறாமல் இருந்தால் அது போலி எனப்படும்
§  மாறும் எழுத்து இருக்கும் இடத்தைப் பொருத்து முதற் போலி, இடைப் போலி, கடைப் போலி என மூன்று வகையாகப் பிரிக்கலாம்



No comments:

Post a Comment