Saturday 28 April 2018

ஓய்வு கவிதை


                   ஓய்வு                                 
ஐம்பத்தெட்  டானது அரசுப்பணி   போனது
அத்தனை வருவாயும்  அரைவாசி  ஆனது
மக்களும்  மனைவியும் மதிக்கத்  தவறினர்
                  என்னுங்கோ என்பவள் யே!எனக்  கேட்டாள்
ஏழுமணி  ஆனது ஐந்துமணிக்  காப்பி 
கோப்பை  ஒருகையில் தினத்தாள் மறுகையில்
என்றே பழகி இருந்தவனுக் கிப்போது
எத்தனை ஏசல்கள் எத்தனை ஏவல்கள் 
மரமே நடுங்கும்  மார்கழிப் பனியில்
பாலொடு  தினத்தாள் வாங்கி வரும்பணி
தொட்டிக்குத் தண்ணீர்  தோட்டியிடம் குப்பையைக் 
கொட்டி  வருவதும் கால்மிதியைத்  தட்டுவதும்
வீதிவியா பாரியைக் கூவி நிறுத்துவதும் 
வீட்டார்  படுத்தபின் வெளிக்கதவைப் பூட்டுவதும் 
அன்றாட அலுவல்கள்   அத்தோடு மட்டுமா
தொலைபேசி மின்சாரக்  கணக்கெல்லாம் வைத்திருக்கும்
தலைமை எழுத்தர்  வீட்டில் உள்ளோர்க்கு
சுட்டிப்பய   லாயியங்கும் குட்டிப் பணியாள்நான்
பேரனை மடிவைத்து குளித்தாள் மனைவி 
ஆணுக்குள்ள ஆசையும்  அத்தோடு அறுந்தது
ஐம்பத்தெட்டு ஆனது அத்தனையும் போனது

No comments:

Post a Comment