Thursday 1 December 2016

உயிர்ப் பொருள்களின் பண்புகள்

                                               இன்றைய இலக்கணம்29-11-16
              உயிர்ப்பொருள்களின் குணப்பண்புகள்(நன்னூல் உரியியல்)
 அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறை(சொன்னசொல்தவறாமை), பொறை, ஓர்ப்பு(எடுத்தசெயலைமுடிக்கும்துணிவு), கடைப்பிடி, (கொண்ட கொள்கையில் விடாப்பிடிப்பு)மையல், வினைவு(செயல்திறன்), வெறுப்பு, உவப்பு, இரக்கம்,நாணம், வெகுளி, துணிவு, அழுக்காறு (பொறாமை), அன்பு எளிமை, எய்தல், துன்பம் இன்பம்,இளமைஉவப்பு,இகல்,வெற்றி,பொச்சாப்பு(முக்கியமானதைமறந்துவிடுதல்) ,ஊக்கம்,மறம்,மதம்,மறவி(எதையும் மறந்துவிடுதல்-முதுமை ),
  இவையெல்லாம் உடம்போடு கூடிய உயிரின் தன்மைகள் 
            உயிர்ப்பொருள்களின் தொழிற்பண்புகள்
துய்த்தல் ,துஞ்சல், ஒழுகுதல்,அணிதல், உய்த்தல்,இவைபோல் பிற
                  உயிர் அற்ற பொருள்களின் தன்மைகள்
பலவகை விடிவங்கள்(வட்டம், முக்கோணம்,நீளம் குட்டை,கோடு புள்ளிபோன்றன )
இருவகை நாற்றம்(நல்லவாசனை கெட்டவாசனை)
வண்ணம் ஐந்து( வெண்மை,செம்மை,கருமை,பொன்மை,பசும்மை)
அறுசுவை(இனிப்பு புளிப்பு,கசப்பு,உவர்ப்பு,துவரப்பு,கார்ப்பு)
ஊறு எட்டு(தொட்டுணர்வு)(வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை(தூள்),   
சீர்மை(அழகாக,ஒழுங்காக),இழுமெனல்(கொழகொழஎன்றுஇருத்தல்)சருச்சரை(சொரசொரப்பு.-)
        இருபொருள்களுக்கும் உள்ள பொதுத் தன்மைகள்
தோன்றல்,மறைதல்,வளர்தல்,சுருங்கல்,நீங்கல்,அடைதல்,நடுங்கல்,இசைத்தல்,ஈதல் என்னும் ஒன்பதும் ஆகும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          


No comments:

Post a Comment