Thursday 1 December 2016

உயிர் உள்ள பொருளின் தன்மைகள்

           இன்றைய இலக்கணம்30-11-16
                 கருப்பொருள்
கருஎன்றால் மூலம்,முதல்,இன்றியமையாதது ,தோற்றத்திற்கு காரணம் எனப்பல பொருள் உண்டு. இங்கு அகபொருளில் கருப்பொருள் பற்றிப்பார்ப்போம்.
திணை இருவகைப்படும். அவை அகத்திணை, புறத்திணை எனப்படும்.எவற்றுள் அகத்திணைக்குரிய பொருள்கள் மூன்று எவை முதல், கரு, உரி என்பன.
அவற்றுள் முதற் பொருள்பற்றி முன்னர் சிறப்பாக விளக்கப்பட்டது. இன்று கருப்பொருள் பற்றிக் காண்போம்.
 கருப்பொருள் அந்தந்த நிலத்திற்கே உரியபொருள் வேறு நிலங்களில் காணமுடியாது.
ஒருநிலத்தில் தோன்றி அந்த நிலத்திலேயே மறைவன. நிலத்தோடு ஒன்றி நிற்பன. அவை
      தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
      செய்தி யாழின் பகுதியொடு
      அவ்வகை பிறவும் கருவென மொழிப (தொல்)
எந்நில மருங்கிற் பூவும்புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும். (தொல்)
சிலர் நூற்பாக்களைக் கேட்டதால் நூற்பாக்களை கொடுத்துள்ளேன். மற்றவர்கள் அதைக்கண்டு கொள்ள வேண்டாம்.
 நிலம் ஐந்து வகைப்படும் யாவரும் அறிவீர்.
முதலில் தெய்வம் (அனைவரையும் தெய்வம் என்றவுடன் மதத்துடன் சேர்த்துப் பார்த்தால் குழப்பம் உண்டாகும் இலக்கணத்தில் தெய்வம் பற்றி மட்டும் பார்ப்போம்).இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பண்டைய இலக்கண இலக்கிய நூலோர் உலகிற்கு முதல்வனாக இருப்பவனைப் பிறவா யாக்கைப் பெரியோன் என்றே குறிக்கின்றன.ஆனால் ஒவ்வொரு நிலமக்களும் பிறவா யாக்கைப் பெரியோன் உடன், அந்தஅந்த நிலங்களுக்குரிய தெய்வங்களை வழிபடுவர்
அந்த அடிப்படையில் குறிஞ்சி நிலத்திற்கு உரிய தெய்வத்தைக் காண்போம்
சேயோன் மேய மைவரை உலகம் என்கிறது தொல்காப்பியம்
மைவரை உலகம் கருமையான மலை.உலகம் என்பது இங்கு இடம் என்ற பொருளில் வந்துள்ளது.
சேயோன் செம்மை நிறமுடையவன். முருகன் மலையும் மலைசார்ந்த பகுதி குறிஞ்சி
குறிஞ்சி என்றாலே செழிப்பான நிலம் பார்க்க அழகாக இருக்கும்.அந்த அழகையே தெய்வமாகக் கொண்டனர்.அழகை முருகு என்று கூறுவர்.எனவே முருகன் குறிஞ்சி நிலத்தெய்வம் ஆயிற்று.இந்த அடிப்படையிலேயே குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்று குவலயத்தோர் வழிபடட்டும் என்று ஔவையார் படத்தில் வசனம் வருகிறது.இந்த அடிப்பைடையில்தான் திருப்பதி மலையில் உள்ள வேங்கடவனை முருகன் என்று வாதிடுகின்றனர்.ஆகவே குறிஞ்சி நிலத்தெய்வம் முருகன்.


No comments:

Post a Comment