Tuesday 15 November 2016

தொல்காப்பிய இலக்கணம்

              இன்றைய இலக்கணம்15-11-16
ஒரு ஊர் என்பது சரியாஓர் ஊர் என்பது சரியா?
பெருமை+ அறம்=பேரறம் எப்படி ஆயிற்று என்பது பற்றிப் பார்ப்போம்
ஒரு சொல்லுடன் ஒருசொல்சேருவதைப் புணர்ச்சி என்பர்.
ஒரு சொல் உயிர் எழுத்திலோ அல்லது மெய் எழுத்திலோதான் முடியும்.அதாவது அ முதல் ஔ வரை உள்ள எழுத்துகளில் ஒன்றோ அல்லது க் முதல் ன் வரை உள்ள எழுத்துகளில் ஒன்றோ தான் வரும். எடுத்துக்காட்டு காகம் இது ம் என முடிந்து உள்ளது. காக்கா இது கா எனமுடிந்துள்ளது. கா என்பதை க்+ஆ பிரித்து ஆவில் முடிந்தது எனக்கொள்ள வேண்டும். காகம் என்பதன் முதல் எழுத்து கா அல்ல க்+அ எனப்பிரித்து க் எனும் மெய் எழுத்து வந்ததாகக் கொள்ள வேண்டும்.
முதலில் நிற்கும் சொல்லை நிலைமொழி என்றும்  அத்துடன் சேரவருகின்ற சொல்லை வருமொழி என்றும் கூறுவர்.
வருமொழி முதலில் உயிர் எழுத்துகள் வரும்போது கவனித்தே சொற்களைச் சேர்க்க வேண்டும்.
ஒரு ஓர் பற்றி முதலில் பார்ப்போம்.
 மெய் எழுத்துகளில் வருமொழி தொடங்கினால் ஒரு போட்டு எழுத வேண்டும்.
எ-டு ஒரு மாடு ஒருகதை
 வருமொழி உயிர் எழுத்துகளில் தொடங்கினால் ஓர் போடவேண்டும்.
எ-டு   ஓர் ஊர், ஓர்ஆடு, ஓர் ஐயம்   
அதே போல் அது மற்றும் அஃது போடும் இடங்களைப் பார்ப்போம்
மெய் எழுத்துகளில் வருமொழி தொடங்கினால் அது போட்டு எழுத வேண்டும்.
எ-டு அது மாடு, அது கதை
உயிர் எழுத்துகளில் தொடங்கினால் அஃது போடவேண்டும்.
எ-டு  அஃது ஊர், அஃது ஆடு,  அஃதுஓர் ஐயம் 
அதேபோல் பண்புப் பெயர்கள் சேரும் முறையைப் பற்றிப் பார்ப்போம்
செம்மை.பெருமை, சிறுமை போன்று மை என முடியும் சொற்களை நாம் பண்புச் சொற்கள் என்போம்.
மெய் எழுத்துகளில் வருமொழி தொடங்கினால் இயல்பாய்ச் சேரும்.
எ-டுசெம்மை+கோழி= செங்கோழி
     பெருமை+பனை= பெரும் பனை
வருமொழி உயிர் எழுத்துகளில் தொடங்கினால் முதல் எழுத்து நீளும்
 எ-டு செம்மை+அடி= சேவடி
      பெருமை+அறம்= பேரறம்
பண்புப் பெயர்ப் புணர்ச்சியில் விதிவிலக்குகள் உண்டு அவை பற்றி நாளை பார்ப்போம்
 இதை ஆங்கிலத்தில் Article என்பர்
எங்கு  a, an,the (some) போடவேண்டும் என்பதையும்  அறிந்து கொள்வோம்
தமிழ் மொழி போலவே ஆங்கிலத்திலும் உயிர் ஒலி(vowelsound)மெய்யொலி(Consonant sound) உண்டு.
இதைத் தமிழ்முறைப்படிப் பார்ப்போம்
A E I O U என்பன ஆங்கில  (vowels) உயிர் எழுத்துகள் எனப்படும்
பிற ஆங்கில எழுத்துகள் (Consonants)மெய் ஒலிகள் எனப்படும்.
வருமொழி முதலில்(vowels) உயிர்ஒலிகள் வரும் போது AN போடவேண்டும் அதற்கு எளிய வழி வருமொழியில் வரும் ஆங்கிலச் சொல்லைச் சொல்லிப் பார்க்கவேண்டும். அது தமிழில் உள்ள அ,ஆ----- ஔ என்ற ஒலிவந்தால் AN போடவேண்டும். An ass, An enemy, an inkstand,an orange,an umbrella
 அ.ஆ ஒலி இல்லாமல் இருந்தால்  (A E I O U என வந்தாலும்.) A போடவேண்டும்.
எ-டு a university(இதைத்தமிழிலில் யுனிவர்சிட்டி என்று சொல்வதால் தமிழ் அ,ஆ ஒலி அல்ல யு என ய் முதலில் வருகிறது )a union, a european(யூரோப்பியன்), a ewe  a unicorn a useful(யூஸ்புல்) man
உலகில் உள்ள ஒரே பொருள் மற்றும் superlatives முன் The போடவேண்டும்.
 The Red sea
 The Hindus
 The best

ஆங்கிலம் அறிந்தோர் ஆங்கில இலக்கணத்தை எளிய முறையில் அரசுப் பணி கையில் குழுவில் பகிரவும் 

No comments:

Post a Comment