Tuesday 15 November 2016

இதுஎன்ன தமிழ்மொழியா? எவன்மொழிக்கோ அடிமைதானா?
சுழியத்தில் தொடங்கிப் பிறையாய் வளைந்து
நின்றும் கிடந்தும் இருக்கும் அகரம்
உலக மொழிக்கே முதலெழுத் தானது
எல்லா ஒலிக்கும் எழுத்து வேண்டுமெனக்
சமக்கிரு தத்தைத் தந்தவர் தமிழர்
அரபியர் வந்தே அருந்தமிழ் கற்றனர்
வளர்தமிழ் எண்ணை வையத்தில் பரப்பினர்
உலக மொழியெலாம் உயிரும் மெய்யுமாய்
ஊடுருவி நிற்பது ஒண்டமிழ் மொழியே
தமிழை அழிக்கத் தரணியில் யாருளர்?                                  
தமிழ்நாட்டுத் தமிழனே தடியெடுத்து நிற்கின்றான்
இந்திப் பேயை ஒழிக்க நினைத்து
ஆங்கில  அரக்கிக்கு அடிமைப் பட்டனர்
அமுதத் தமிழானது ஆங்கில நஞ்சாய்!
சித்தி மகளைத்தான் அத்தைமகள் ஆக்கினர்  (சித்தியும்,அத்தையும்Aunty)
பரங்கியர் ஆட்சி பாரதத்தில் போனாலும்
நம்தமிழ் நாட்டில் நல்லாட்சி செய்கிறான்
தமிழா? தங்கிலீசா? தலைகுனி தமிழா!
விலைமகளை விரும்பி விற்றாய் அன்னையை
கலைத்தமிழ் அன்னையைக் காக்கப் புறப்படு!
                  
புலவர்.ஆ.காளியப்பன்MA;MEd                                                  முத்தம்மாள்நிலையம்                                                      பூலுவபட்டி(அஞ்)                                      ஆலாந்துறைவழி                                           கோவை-641101                                                     அலைபேசி 9788552993
      மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் சிறப்புக் கவிஅரங்கிற்கு 19-10-16 அன்று அனுப்பப் பட்டது.  நடக்கும் நாள் 27-11-16                                   
              முகவரி:  கவிமாமணி சி.வீரபாண்டியத்தென்னவன்
                     10ஆம்குறுக்குத்தெரு,திருவள்ளுவர் நகர்
                      பழங்காநத்தம். மதுரை 625003.

                      கைபேசி 98421-81562            

No comments:

Post a Comment