Tuesday 25 October 2016

இலக்கணம்

                                                சந்திப்பிழை (வலிமிகும்,மிகா இடங்கள்)
மெய்எழுத்துகள் மொழிக்கு முதலில் வாரா. அவை உயிர் எழுத்துகளுடன் கூடிமொழிக்கு முதலில் வரும்.நிலைமொழி ஈற்றில் உயிர்மெய்எழுத்துகள் வரும் போது (உயிர்எழுத்தே வரும்.)அப்படி உயிர் எழுத்து மொழிக்கு இறுதில் நிற்கும் போது வருமொழியின் முதலில் க,ச,த,ப என்ற எழுத்துகளின் வர்க்கங்கள் வரும் போது அவை மிகுமா?மிகாதா? என்பது பற்றிப் பார்ப்போம்.
   இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
   க ச த ப மிகும் விதவாதன மன்னே. என்பது நன்னூல்(165)
அந்த விதிப்படி சந்திப்பிழைபற்றி விளக்குகிறேன்.             
1) இரண்டாம் வேற்றுமை உருபு ஐ வரும் போது வல்லினம் மிகும்
எ-டு கோவிலை+கட்டினான்= கோவிலைக் கட்டினான்
     தொழிலை+செய்தான்=தொழிலைச் செய்தான்
     பழத்தை+ தின்றான்= பழத்தைத்தின்றான்
     பாடத்தை+படித்தான்= பாடத்தைப்படித்தான்
2)நான்காம் வேற்றுமை கு வரும் போது வல்லினம் மிகும்
     பெண்ணுக்கு+ கொடுத்தான்= பெண்ணுக்குக் கொடுத்தான்
3)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வரும் போது வல்லினம் மிகும்
     காணா+கடவுள்= காணாக் கடவுள்
4)இ என முடியும்வினையெச்சச் சொற்கள் வரும் போது வல்லினம் மிகும்
     ஓடி+போனான்= ஓடிப்போனான்
5)ஆய் எனமுடியும் சொற்கள் வரும் போது வல்லினம் மிகும்
          மெதுவாய்+ தாங்கு=மெதுவாய்த்தாங்கு
6)இருபெயரொட்டுப் பண்புத்தொகை சொற்கள் வரும் போது வல்லினம் மிகும்.
     சாரை+பாம்பு= சாரைப்பாம்பு
7)செய என்ற வாய்பாட்டில்அமையும் சொற்கள் வரும் போது வல்லினம் மிகும்
     தர+செய்தான்= தரச்செய்தான்
8)அ இ  என்ற சுட்டு எழுத்துகள் வரும் போது வல்லினம் மிகும்.
      அ+குதிரை=க்குதிரை
      இ+குதிரை=க்குதிரை
9)எ என்றவினா எழுத்து  வரும் போது வல்லினம் மிகும்.
எ+குதிரை=எக்குதிரை
10) எந்த,அந்த,இந்த என்ற சொற்கள் வரும் போது வல்லினம் மிகும்
     எந்த+சிறுவன்= எந்தச்சிறுவன்
     அந்த+பையன்= அந்தப்பையன்
     இந்த+தம்பி= இந்தத்தம்பி
11) வன்தொடர் குற்றியலுகரச் சொற்கள் வரும் போது வல்லினம் மிகும்
    மீட்டு+தந்தான்=மீட்டுத்தந்தான்
12)நெடில்தொடர் குற்றியலுகரச் சொற்கள் வரும் போது வல்லினம் மிகும்
     தீ+குணம்= தீக்குணம்
13)அப்படி,இப்படி,எப்படி,அங்கு,இங்கு,எங்கு,இனிஎன்றசொற்கள்வரும்போதுவல்லினம் மிகும்
     அப்படி+சொன்னான்=அப்படிச் சொன்னான்
     இப்படி+கொடுத்தான்=இப்படிக்கொடுத்தான்
     எப்படி+தந்தான்=எப்படித்தந்தான்
     இனி+படிப்பான்=இனிப்படிப்பான்
14மற்ற,மற்றை,மற்று அன்றி,இன்றிஎன்றசொற்கள்வரும்போதுவல்லினம் மிகும்
     மற்ற+காரியம்=மற்றக்காரியம்
     இவரின்றி+செய்யார்=இவரின்றிச்செய்யார்
15).ய்,ர்ழ் என்ற எழுத்துகள்  வரும் போது வல்லினம் மிகும்
     நாய்+கால்= நாய்க்கால்
     தயிர்+குடம்=தயிர்க்குடம்
     தமிழ்+செய்யுள்=தமிழ்ச்செய்யுள்
  நாளை வலிமிகா இடங்கள் பற்றிப்பார்ப்போம்
இன்றைய இலக்கணம் 25-10-16     
                      வலிமிகா இடங்கள்
1).அது இது எதுஎன்ற என்றசொற்கள்வரும்போதுவல்லினம்
   அது கண்டாய்,இது செய்தாய் எது பார்த்தாய்
2)முதல் வேற்றுமையில் வரும்போதுவல்லினம்
     புலி கண்டது
     எலி கீச்சிட்டது
3)மூன்றாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை விரியில்வல்லினம் மிகாது.
     கண்ணகியோடு சென்றான்
     எனது தம்பி
 4)விளித்தொடர்களில் வல்லினம் மிகாது
     அண்ணா கேள்
     தாயே தா
5)பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது.
     ஓடிய குதிரை
     பார்த்த பெண்
6)செய்யிய,செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் முன் மிகாது.
     உண்ணிய கண்டான்
உண்ணுபு தந்தான்
7)இரண்டாம் வேற்றுமைத்தொகையில் மிகாது.
     நாடு கண்டான்
8)படி என முடியும் வினையெச்சத்தின் முன் மிகாது.
     தரும்படி சொன்னான்
வரும்படி கேட்டான்
9) அகர ஈற்று வினைமுற்றுக்களுடன் புணரும் போது வல்லினம் மிகாது.
     சென்றன கழுதைகள்
     ஒடிந்தன சிறகுகள்
10) வியங்கோள் வினைமுற்றுக்களுடன் புணரும் போது  வல்லினம் மிகாது.
     வாழ்க தமிழ்
     வாழியதமிழ்
11) வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
     ஊறுகாய்
12) அவ்வளவு,இவ்வளவு, எவ்வளவு என்ற சொற்களின் முன் வல்லினம் மிகாது.
     அவ்வளவு கண்டான்
     இவ்வளவு தந்தான்
     எவ்வளவு பெற்றான்.
13) ஆ,,ஏ என்னும் ஈறுகளையடைய வினாப் பெயர்களுடன் மிகாது.
     அவனா கண்டான்
     இவனோ தந்தான்
அவனே பார்த்தான்
14) எண்ணுப் பெயர்களுடன் வல்லினம் மிகாது
     ஒன்று கொடு
     எட்டு தா
     நான்கு பிள்ளை
15) பல,சில என்னும் அகரவீற்று அஃறிணைப் பெயர்களுடன் வல்லினம் மிகாது.
     சில கழுதை,
     பல தலைகள்
16)வன்றொடர் ஒழிந்த ஏலைய குற்றியலுகரங்கள் முன் வல்லினம் மிகாது
     ஆறு தலை
எஃகு சிறியது

செய்து போனான்
               




1 comment:

  1. 14) எண்ணுப் பெயர்களுடன் வல்லினம் மிகும் ஐயா

    (அரை, பாதி, எட்டு, பத்து ) அரைப்பக்கம், பாதித்துணி, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

    ReplyDelete