இதுஎன்ன தமிழ்மொழியா? எவன்மொழிக்கோ அடிமைதானா? 
சுழியத்தில் தொடங்கிப் பிறையாய் வளைந்து
நின்றும் கிடந்தும் இருக்கும் அகரம்
உலக மொழிக்கே முதலெழுத் தானது
எல்லா ஒலிக்கும் எழுத்து வேண்டுமெனக்
சமக்கிரு தத்தைத் தந்தவர் தமிழர்
அரபியர் வந்தே அருந்தமிழ் கற்றனர்
வளர்தமிழ் எண்ணை வையத்தில் பரப்பினர்
உலக மொழியெலாம் உயிரும் மெய்யுமாய்
ஊடுருவி நிற்பது ஒண்டமிழ் மொழியே
தமிழை அழிக்கத் தரணியில் யாருளர்?                                  
தமிழ்நாட்டுத் தமிழனே தடியெடுத்து நிற்கின்றான் 
இந்திப் பேயை ஒழிக்க நினைத்து
ஆங்கில  அரக்கிக்கு
அடிமைப் பட்டனர்
அமுதத் தமிழானது ஆங்கில நஞ்சாய்! 
சித்தி மகளைத்தான் அத்தைமகள் ஆக்கினர்  (சித்தியும்,அத்தையும்Aunty)
பரங்கியர் ஆட்சி பாரதத்தில் போனாலும்
நம்தமிழ் நாட்டில் நல்லாட்சி செய்கிறான்
தமிழா? தங்கிலீசா?
தலைகுனி தமிழா!
விலைமகளை விரும்பி விற்றாய் அன்னையை 
கலைத்தமிழ் அன்னையைக் காக்கப் புறப்படு  அடக்கி வைப்போம்                              அலைபேசி
அறிவியல் குழந்தைகள் ஆயிரம் உண்டு
அலைபேசி என்பது அதன்கடைக் குட்டி
அவணியே குனிந்து அதனைக் கொஞ்சுது
பிறந்த போதோ பேச்சுமட்டும் இருந்தது
வளர்ந்த பின்பு வையத்தை வளைத்தது
சொந்தக் குழந்தையோ சோகம் கொள்ள
இந்தக் குழந்தையை ஏந்தினர் கையில்
பைத்தியம் ஆகியே செய்தொழில் மறந்தனர்
தொட்டில் குழந்தையும் கட்டில் கிழவனும்
கட்டுண்டு கிடப்பது கையளவுப் பெட்டியில்
அரசனும் ஆண்டியும் அதனிடம் மயங்கினர்
கரவிரல் கொண்டே கண்டனர் உலகை
சுயசிந்தனை என்பதைச் சுத்தமாய்த் துடைத்து
மூளையின் ஆற்றலை முடக்கிப் போட்டது
ஊணும் உறக்கமும் மறக்கச் செய்து
உறவையும் நட்பையும் ஒதுங்கச் செய்தது
உரையாடல் விளையாடல் ஒழிந்து போனது
மாதும் சூதும் மயக்குவது போலவே
காதுக்குள் பேசியே காலத்தைக் கொல்வது 
கணவன் மனைவி உறவைக் கெடுத்ததால்
குழந்தைப் பிறப்பும் குறைந்து போனது
களவையும் கற்பையும் கற்றுக் கொடுக்குது
கலியுகம் அழிக்கக் கங்கணம் கட்டுது
அமிழ்தையும் நஞ்சையும் கலந்து
கொடுக்கும்                                                  அலைபேசி அதனையே அடக்கி
வைப்போம்.
                புலவர்ஆ.காளியப்பன்! 
No comments:
Post a Comment