Sunday 25 August 2019

பணக்காரன் ஆக எளிய வழி


இலக்கணம் படித்தவனும் விளக்கெண்ணெய் குடித்தவனும் பணக்காரன் ஆவார்.

இலக்கணம் படித்தவன் ஒரு மொழியைப் பிழையில்லாமல் பேசுவான் எழுதுவான். அதனால் நல்ல மதிப்பெண் பெறுவான். அதனால் நல்ல வேலைக்குப் போவான். அதனால் நல்ல சம்பளம் கிடைக்கும். அதனால் பணக்காரன் ஆவான்

இலக்கணம் படித்தால் வீடு பேறு அடையலாம் என்று ஒருபழம்பாடல் கூறுகிறது.

எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும்- மொழித்திறத்தின்
முட்டறத்த நல்லோன் முதனூல் பொருளுணர்ந்து
கட்டறத்து வீடு பெறம்

விளக்கெண்ணெய் குடித்தவன் எப்படிப் பணக்காரன் ஆவான்
விளக்கெண்ணெய் குடித்தால் வயிறு சுத்தமாகும் வயிறு சுத்தமானால் நோய்கள் வாரா. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வயிற்றைச் சுத்தம் செய்ய வேண்டும் அதற்காக பேதியாக விளக்கெண்ணெய் குடிக்க வைப்பார்கள் பதிவு புலவர் ஆ.கா

No comments:

Post a Comment