Thursday 12 October 2017

பிறருக்கு அறிவுரை கூறினால்



இல்லக் கிழத்தின் எண்ணத் தவற்றினை
                எடுத்து உரைக்க எண்ணும் போதும்
வில்லங்க ஆட்களை விட்டு விலகென
                மகனிடம் மன்றாடிக் கேட்கும்  போதும்
கல்யாண செய்தபின் கலக்கமுறும் மகளைக்
                கணவனுடன் ஒத்துவாழச் சொல்லும் போதும்
செல்லாக் காசான நல்லதொறு ஆண்மகனும்
                நாவுிருந்தும் ஊமைதான் நானிலமீ தினிலே.
புலவர்ஆ.காளியப்பன்

No comments:

Post a Comment