Tuesday 17 January 2017

இலக்கணக்குறிப்புக் காணும் முறை



               இலக்கணக் குறிப்புக் காணும் முறை
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இலக்கணக் குறிப்புகள்
1) பண்புத்தொகை
2)வினை த் தொகை
3)உவம(மை)த்தொகை
4)உம்மைத் தொகை
5)அன்மொழித் தொகை
6)வேற்றுமைத் தொகை
7)எழுவாய்த் தொடர்
8)விளித் தொடர்
9)தெரிநிலை வினைமுற்று
10)குறிப்பு வினைமுற்று
11) பெயர் எச்சம்
12) வினையெச்சம்
13) வியங்கோள் வினைமுற்று
14)அடுக்குத் தொடர்
15)இரட்டைக் கிளவி
இன்னும்பல                  
: வியங்கோள் வினைமுற்று மொழியின் கடைசியில் `'வந்திருந்தால் அதை நீக்கியபின் கட்டளை சொல் இருந்தால் அது வியங்கோள் வனை முற்று எடு வாழ்க, ஒழிக,தருக,செய்க இவற்றில் க. வை நீக்கியபின் இருப்பது வாழ்,ஒழி,தா,செய் என்னும் கட்டளைச் சொற்கள் உள்ளன இவ்வாறு வருவன வியங்கோள் வினைமுற்று வாழி(வாழ்+இ)
வாழிய (வாழ்+இய)
வாழியர்(வாழ்+இயர்)
          இவ்வாறு மொழிக்கு இறுதியில் க,இய இயர் இ  என்பவை வந்து         அவற்றை     நீக்கியபின் கட்டளைச் சொல் இருப்பின் வியங்கோள் வினைமுற்று
                           அடுக்குத்தொடர்
         வந்த சொல் திரும்பத் திரும்ப வந்தால் அது அடுக்குத் தொடர் ஆனால் அதில் ஒருசொல்லை நீக்கினாலும் மற்ற சொல்லுக்குப் பொருள் இருக்க வேண்டும் அடுக்குத் தொடர் எடு பாம்பு !பாம்பு!
வருக வருக ஒரு பாம்பை நீக்கினாலும் இன்னொரு பாம்புக்குப் பொருள் உள்ளதுபொருள் இல்லை என்றால் இரட்டைக் கிளவி எடு கலகல எனச் சிரித்தாள் இதில் கலகல இரட்டை கிளவி இதில் ஒரு கல நீக்கினால் மற்றொரு கல பொருள் தராதுஆகவே இஃது இரட்டைக் கிளவி                        
: ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஒரு சொல்லின் இறுதியில் துணிக்கால் இருந்தால் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எடு
ஓடா க் குதிரை தேடாப் பொருள்  வாராமாடு
ஆக வந்த பையன்- பெயரெச்சம்
வாராத பையன் எதிர்மறைப் பெயரெச்சம் வாராப் பையன் ஈறுகெட்ட (ஈற்றில் உள்ள த கெட்டு)எதிர்மறைப் பெயரெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 


           பண்புத் தொகை காண எளிய வழி   ஒரு தொடரில் பொருள்ள சொல்லை மறைத்துக் கொள்க  அதற்கு முன் அர்த்தமற்ற சொற்கள் இருந்தால் அது பண்புத் தொகை எ-டு
கடுந்திறல்  இதில் திறல் ஐ நீக்கியபின் கடுந் பொருள் இல்லை ஆகவே அது பண்புத்தொகை நல்லாறு ஆறு நீக்கிய பின் நல்ல் பொருள் இல்லை
முதுமரம் மரம் நீக்கிய பின் முது பொருள் இல்லை ஆகவே அது பண்புத் தொகை மற்ற சொற்களை சோதித்துக் கொள்ளவும்

வினைத்தொகை
ஊறுகாய் இதில் அர்த்தமான சொல்லை (காய்) நீக்கியபின் முன்னால் கட்டளைச் சொல் உள்ளது.இப்படி அர்த்தமான சொல்லை நீக்கிய பின் முன்னால் கட்டளைச் சொல் இருந்தால் வினைத்தொகை எழுஞாயிறு ஞாயிறு நீக்கிய பின் எழு என்பது கட்டளைச்சொல் ஆகவே அது வினைத்தொகை

உம்மைத்தொகை                                                                                      இனமானபல பொருள்களை கூறும் போது இடையில் உம் போடாமல் கூறினால் உம்மைத் தொகை மாவும் பலாவும்
என்பதை மா பலா வாழை
கடலைபொரி,
தேங்காய் பழம்
சேர சோழ பாண்டியர்
போன்றன.

உவமைத் தொகை
பவளம் போன்ற வாய் இது உவமை இதில் போன்ற என்ற உவம உருபு மறைந்து பவளவாய் என வருவது
உவமைத் தொகை

அன்மொழித் தொகை
ஊறுகாய் என்பது ஊறுகாயைக் குறிக்காமல் ஊறுகாய் விற்பவனைக் குறித்தால் அது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
ஏ கடலைபொரி இங்கே வா என்னும் போது கடலைபொரி அதைக் குறிக்காமல் விற்பவனைக் குறிக்கிறது எனவே அது உம்மைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
 அதேபோல் ஏ வெற்றிலை இங்கே வா எனும் போது அன்மொழித்தொகை






                  
      

இப்பொழுது கூறுவது இலக்கண ப் படி கொள்ளாது மதிப்பெண் பெறும் நோக்கில் எடுத்துக் கொள்ளவும்
எழுதி வைத்து க் கொள்ளவும் பார்த்தவுடன் விடை எழுதும் வினாக்கள்
1)அளபெடை
2) வியங்கோள் வினைமுற்று
3) அடுக்குத்தொட்ஸ்ரீ
4) ஈறுகெட்ட
எதிர் மறைப் பெயரெச்சம்
5)இரட்டைக் கிளவி
6) முரண் தொடை
7)எண்ணும்மை
 இதில்
அளபெடை
மொழிக்கு நடுவிலும் கடைசியிலும் அ ஆ போன்ற உயிர் எழுத்து கள் வாரா .அப்படி வந்தால் அது அளபெடை
தொழா அல்
அழீ இ  போல் வருவன.
இனி அஃது  என்ன அளபெடை எனக் கூறவேண்டும். மொழிக்கு இடையிலும் கடையிலும் "இ" வந்தால் சொல்லிசை அளபெடை எடு
அறனழீ இ , நசை இ போல்வன.
மற்ற(அ,,,ஒ) எழுத்துகள் வரும்போது மூன்று எழுத்து இரண்டு எழுத்துச் சொல்லாக (எழுத்து எண்ணும் போது புள்ளி எழுத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது)அது செய்யுளிசைஅளபெடை எனப்படும் இதற்கு இசைநிறை அளபெடை என்ற வேறு பெயரும் உண்டு. எடு
தொழாஅள் ,படூஉம் மூன்று எழுத்து வந்துள்ளது
மூன்றுக்கு மேல் எழுத்துகள் வந்தால் இன்னிசை அளபெடை
எடு
கெடுப்பதூஉம் எடுப்பதூஉம் போல்வன 5 எழுத்துவந்துள்ளது.
ஆக இ வந்தால் சொல்லிசை
மூன்றுக்கு குறைவாக எழுத்து வந்தது செய்யுளிசை அல்லது இசை நிறை அளபெடை
அதிக எழுத்து வரின்
இன்னிசை அளபெடை
   இப்பொழுது கூறுவது இலக்கண ப் படி கொள்ளாது மதிப்பெண் பெறும் நோக்கில் எடுத்துக் கொள்ளவும்
எழுதி வைத்து க் கொள்ளவும் பார்த்தவுடன் விடை எழுதும் வினாக்கள்
1)அளபெடை
2) வியங்கோள் வினைமுற்று
3) அடுக்குத்தொட்ஸ்ரீ
4) ஈறுகெட்ட
எதிர் மறைப் பெயரெச்சம்
5)இரட்டைக் கிளவி
6) முரண் தொடை
7)எண்ணும்மை
 இதில்
அளபெடை
மொழிக்கு நடுவிலும் கடைசியிலும் அ ஆ போன்ற உயிர் எழுத்துகள் வாரா .அப்படி வந்தால் அது அளபெடை
தொழா அல்
அழீ இ  போல் வருவன.
இனி அஃது  என்ன அளபெடை எனக் கூறவேண்டும். மொழிக்கு இடையிலும் கடையிலும் "இ" வந்தால் சொல்லிசை அளபெடை எடு
அறனழீ இ , நசை இ போல்வன.
மற்ற(அ,,,ஒ) எழுத்துகள் வரும்போது மூன்று எழுத்து இரண்டு எழுத்துச் சொல்லாக (எழுத்து எண்ணும் போது புள்ளி எழுத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது)அது செய்யுளிசைஅளபெடை எனப்படும் இதற்கு இசைநிறை அளபெடை என்ற வேறு பெயரும் உண்டு. எடு
தொழாஅள் ,படூஉம் மூன்று எழுத்து வந்துள்ளது
மூன்றுக்கு மேல் எழுத்துகள் வந்தால் இன்னிசை அளபெடை
எடு
கெடுப்பதூஉம் எடுப்பதூஉம் போல்வன 5 எழுத்துவந்துள்ளது.
ஆக இ வந்தால் சொல்லிசை
மூன்றுக்கு குறைவாக எழுத்து வந்தது செய்யுளிசை அல்லது இசை நிறை அளபெடை
அதிக எழுத்து வரின்
இன்னிசை அளபெடை


                    


இரண்டாம் தமிழ்ச் சங்கமும் ஆழிப்பேரலையால் அழிந்து போனபின் இப்போது உள்ள வைகை ஆற்றங்கரையில் உள்ள மதுரையில் மூன்றாம் சங்கம் அமைக்கப் பட்டது இதை முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை ஆதரித்தனர். பாடிய அரசர்கள்3 பேர்
இருந்த புலவர்கள் 49 பேர்.
தோன்றிய நூல்கள் நெடுந்தொகை,குறுந்தொகை,நற்றிணை, புறநானூறு,பதிற்றுப் பத்து
,கலித்தொகை,
பரிபாடல்,கூத்து,வரி,குற்றிசை,பேரிசை போன்றன. நாளை எட்டுத்தொகை நூல்கள்
நாளை பிற 10. ,12ஆம்

வியங்கோள் வினைமுற்று மொழியின் கடைசியில் `'வந்திருந்தால் அதை நீக்கியபின் கட்டளை சொல் இருந்தால் அது வினைத்தொகை எடு
வாழ்க,ஒழிக,தருக,செய்க இவற்றில் க. வை நீக்கியபின் இருப்பது வாழ்,ஒழி,தா,செய் என்னும் கட்டளைச் சொற்கள் உள்ளன இவ்வாறு வருவன வியங்கோள் வினைமுற்று வாழி(வாழ்+இ)
வாழிய (வாழ்+இய)
வாழியர்(வாழ்+இயர்)
இவ்வாறு மொழிக்கு இறுதியில் க,இய இயர் இ  என்பவை வந்து அவற்றை நீக்கியபின் கட்டளைச் சொல் இருப்பின் வியங்கோள் வினைமுற்று
 ! : அடுக்குத்தொடர்
வந்த சொல் திரும்பத் திரும்ப வந்தால் அது அடுக்குத் தொடர் ஆனால் அதில் ஒருசொல்லை நீக்கினாலும் மற்ற சொல்லுக்குப் பொருள் இருக்க வேண்டும் அடுக்குத் தொடர் எடு பாம்பு !பாம்பு!
வருக வருக ஒரு பாம்பை நீக்கினாலும் இன்னொரு பாம்புக்குப் பொருள் உள்ளது
பொருள் இல்லை என்றால் இரட்டைக் கிளவி எடு கலகல எனச் சிரித்தாள் இதில் கலகல இரட்டை கிளவி இதில் ஒரு கல நீக்கினால் மற்றொரு கல பொருள் தராது
ஆகவே இஃது இரட்டைக் கிளவி

உரிச்சொல் பெயர், வினைகளுக்கு உரிமைபூண்ட சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும் அவை ஒரு  குணம் தழுவிய பல உரிச்சொற்கள்  பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல் என இதுவகைப் படும்
ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்கள் சால,உறு, தவ, நனி,கூர், கழி என்ற ஆறும் இந்த ஆறும் மிகுதி என்னும் ஒரே பொருளைத் தரும்
எ-டு
சாலப் பசித்தது
உறுபசி
தவச்சிறிது
நனி தின்றான்
கூர் பசி
கழி பேருவகை
அடுத்து
பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல் கடி
இது காவல்
கூர்மை
மணம்
விளக்கம்
அச்சம்
விரைவு
மிகுதி என்னும் பல பொருள்களில் வரும்
கடி நகர்- காவல் பொருந்திய நகர்
கடிவாள்- கூர்மையான வாள்
கடிமலர் மணம் பொருந்திய மலர்
பொதுவாக கீழே வரும் சொற்களை மனனம் செய்து கொள்க
அச்சொற்கள் வந்தால் உரிச்சொல் தொடர் என இலக்கணஇக்குறிப்பு எழுதவும்
சால, உறு,
தவ,
நனி,
கூர்,
கழி
கடி
நளி
வை
விழு
மா என்ற சொற்களைப் பார்த்தவுடன்
இவை தனியாக வந்தால் உரிச்சொல் என்றும் வேறு சொற்களுடன் சேர்ந்து வந்தால் உரிச்சொல் தொடர் என்றும் இலக்கணக் குறிப்பு எழுதவும்

  
                         


 கீரை வாங்கி வருமாறு தாயார் மகளிடம் கூறினார்’ - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக - அயற்கூற்று வாக்கியம்

2. மாறன் மாட்டை ஓட்டினான் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக - தன்வினை வாக்கியம்

3. அரசன் கோவிலைக் கட்டினான் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக - தன்வினை வாக்கியம்

4. வட்டம்’ - பெயர்ச்சொல்லின் வகை அறிக - பண்புப்பெயர்

5. மன்றம்’ - பெயர்ச்சொல்லின் வகை அறிக - இடப்பெயர்

6. வீதி’ - பெயர்ச்சொல்லின் வகை அறிக - இடப்பெயர்

7. கை’ - பெயர்ச்சொல்லின் வகை அறிக - சினைப்பெயர்

8. நன்மை’ - பெயர்ச்சொல்லின் வகை அறிக - பண்புப்பெயர்

9. சாஎன்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது - மரணம்

10. சோஎன்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது - உமையம்மை

11. பைஎன்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது - படம்

12. என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது - ஐந்து

13. என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது - குபேரன்

14. ஒங்குவாய்’ - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க - ஒங்கு

15. முட்டாள்’ - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க - முட்டு 

No comments:

Post a Comment