Wednesday 9 January 2019

வழிபடு தெய்வம்-தொல்காப்பியம்



                       தொல்காப்பிய முத்துகள்1
நம் அன்றாடப் பயன்பாட்டுக்கு உரிய செய்திகள் தொல்காப்பியத்துள் பல உள்ளன.நாம் ஒவ்வொருவரும் வீட்டிலும் அலுவலகத்திலும் வணக்கம்,வாழ்க, வாழ்க வளத்துடன் என்று நாளும் பயன்படுத்துகிறோம். இவற்றிற்குப் பதிலாகக் கீழ்வரும் தொல்காப்பிய அடிகளை நாம் பயன்படுத்தலாம்.
வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமின்!   (தொல்.பொருள்.செய்யுள்422)
இதன்பொருள்: நீ வழிபடுகின்ற தெய்வம் உன்னையும் உன் குடும்பத்தையும், சுற்றத்தையும் பாதுகாக்கட்டும்! குற்றமற்ற செல்வத்துடன் மக்களையும் குடிவழியினரையும், நீ பெற்று, வழிவழி சிறந்து நீடுவாழ்வாயாக!.
“வழிபடு தெய்வம் நிற்புறம் காப்ப” எனச்சுருக்கி உரைப்பினும் நலமே!

No comments:

Post a Comment